Categories
தமிழ் வரலாறு

பச்சையப்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பச்சையப்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(பச்சையப்ப முதலியார்) பச்சையப்பனாக மாறிவிட்டார். கல்வி ஒரு சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்தால் அந்தக்கல்விக்கு நிதியளித்த வள்ளல் பெருமானாரின் சாதி பெயரையும் மறைக்கும் அளவிற்கு ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தத் தொன்மையான, பெருமைக்குரிய, புகழ்மிக்க கல்லூரியை, பல சினிமா படங்கள் ரவுடிகள் வளர்ப்பு மையமாகவும், கற்பழிப்புக்கு காற்றோட்டமான இடமாகவும், கஞ்சா குடிக்க ஒதுக்குப்புறமான இடமாகவும், மாறி மாறி காறி காறி துப்பித் தள்ளிவிட்டார்கள். அதன் உண்மையான தொன்மையையும், பெருமையையும் பார்த்தோமானால் இந்தக்கல்லூரி […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

கட்டிட கலை அதிசயம் : சாயா சோமேஸ்வரர்

விஞ்ஞானமும், அறிவியலும் வெண்டைக்காய் தக்காளி போல பழகிப்போன இந்த நாட்களில் கூட நாம் புருவம் உயர்த்தி அதிசயிக்கும் வகையில் முன்னோர்களின் சில கட்டடக் கலைகள் இருக்கத்தான் செய்கின்றன. தஞ்சை பெரிய கோவிலின் கட்டிட அறிவியலைப்பதிவிட்டு அதிசயித்த நமக்கு இன்னொரு அதிசயமும் பரிட்சையமானது. அது தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில், நால்கோடா மாவட்டம் பனகல் என்ற பகுதியில் அமைந்திருக்கும் சாயா சோமேஸ்வரர் ஆலயம். இது குன்டுரு சோடாஸ் (தெலுங்கு சோழர்கள்) […]

Categories
ஆன்மீகம் தமிழ்

கட்டிட கலை அதிசயம்: தஞ்சை பெரிய கோவில்

உலகின் எட்டாவது அதிசயமாக தகுதியானதென போற்றப்படும் தமிழனின் பெருமையைப்பரைசாற்றும் கட்டிடக்கலையமைப்பைக் கொண்ட மிகப்பெருமையான தஞ்சை பெரியகோவிலைப்பற்றி சிறிது விளக்கமளிக்க நினைவுகள் பக்கமும் பெருமை கொள்கிறது.

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

மக்கள் விரும்பும் பிரியாணியின் கதை

பிரியாணி, பெரும்பாலான நபர்களால் விரும்பி சாப்பிடப்படும், அல்லது அவ்வாறு ஒரு மாயையைக் கொண்டிருக்கும் பிரபல உணவு வகை.இது உண்மையிலேயே பெரும்பாலான நபர்களால் விரும்பி உண்ணப்படுகிறதா என்ற கேள்விக்கு ஆதாரமாக, ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடப்படும் உணவு வகை பிரியாணி என்றே கூறப்படுகிறது. பிரியாணி என்பது ஈரான் நாட்டில் உருவாகி இப்போது தெற்கு ஆசியப்பகுதியில் இருக்கும் பிரபல உணவு. பிரியாணி என்ற வார்த்தை அரிசி என்பதைக் குறிக்கும் பிரிஞ்ச் என்ற பெர்சிய வார்த்தையிலிருந்தோ, அல்லது பிரியன் அ […]

Categories
தமிழ் வரலாறு

வரலாற்று விழுதுகள்: வேலூர் சிப்பாய் கிளர்ச்சி

அடக்குமுறைகளும், அதற்கு எதிரான கிளர்ச்சிகளும் காலம் காலமாக நிகழும் ஒன்றுதான். இதில் முக்கியமாக குறிக்கத்தகுந்த வகையில் நிகழ்ந்த சம்பவம் வேலூர் சிப்பாய் கிளர்ச்சி. 1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற கிளர்ச்சி, பின்நாளில் 1857 ல் நிகழ்ந்த கிளர்ச்சியின் முன்னோடி. ஆங்கிலேய இராணுவத்தில் பணிபுரிந்த இந்திய சிப்பாய்கள், தமது சமயக்குறியீடுகளான விபூதி, நாமம் போன்றவற்றை அணியக்கூடாது எனவும், கிர்தா வை எடுத்து விட வேண்டும் எனவும், இராணுவ அதிகாரி வற்புறுத்திய காரணத்தாலும், […]

Categories
சினிமா தமிழ்

சினிமா வரலாறு: சத்யஜிட் ரே

திரைப்படம் என்பது பெரும்பாலான சாமானிய மக்களின் பொழுதுபோக்கு என்றாலும், அது வெறுமனே பொழுதுபோக்கு என்ற ரீதியில் மறந்து விடக்கூடியதல்ல. ஒவ்வொரு திரை ரசிகரின் மனதிலும் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தும் திரைப்படத்துறையில் சாதித்தவர்களின் நினைவுகளும் நம்மில் நிலைத்திருப்பது என்னவோ உண்மை. அப்படியான ஒரு திரை ஜாம்பவான் இயக்குனர் சத்யஜித்ரே. யதார்த்தமாக ஒருவர் ஏதாவது திரைப்படத்தைப்பற்றி விமர்சிக்கும் போது, மனசுல பெரிய சத்யஜித்ரே்னு நினைப்பு என்று சொல்லப்படுவது உண்டு. ஏனென்றால் அவர் இயக்குனரோடு அல்லாமல் திரை விமர்சகராகவும் இருந்தவர். மேலும் […]

Categories
சினிமா தமிழ்

சினிமா வரலாறு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்புச் சக்கரவர்த்தி திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பங்களிப்பில்லாமல் தமிழ் சினிமாக்களை நினைவு காண முடியுமோ? “வரி , வட்டி , திரை , கிஸ்தி” என்று கம்பீரமான வீரபாண்டிய கட்டபொம்மனாக நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் கணேசமூர்த்தி ஆகிய சிவாஜி கணேசனுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்து தான் நடிப்பில் ஈடுபாடு வந்தது. அந்த ஈடுபாடு, ஏழு வயதில் பெற்றோருக்குத் தெரியாமல் நாடக சபையில் போய் இணையும் அளவிற்கு லட்சியமாக உருவெடுத்தது. சிறுவயதிலேயே […]

Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

கல்வி தந்தை காமராஜரின் நினைவுகள்

கல்வித்தந்தை காமராஜர், தன்னால் ஏழ்மை காரணமாகப்படிக்க முடியாமல் போனது மாதிரி தம் ஆட்சி காலத்தில் ஏழ்மை காரணமாக படிக்க இயலவில்லை என்று ஒரு குழந்தையும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணியவர்.

Categories
தமிழ் நினைவுகள்

மனதை கவர்ந்த மாருதி 800

பெரும்பாலான மக்களுக்கு சொந்தமில்லாததாக இருந்தாலும் அனைவரது நினைவுகளிலும் நிலைத்து நிற்கும் மாருதி 800 என்ற மகிழுந்தைப் பற்றி ஒரு முறை பின்னோக்கிப் பார்க்கலாம். 1983 முதல் 2014 வரை பல நடுத்தர குடும்ப மக்கள் எளிமையாக சொந்தம் கொண்டாடிய வாகனம் இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்த்து கிட்டதட்ட 30 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆன மாடர்ன் ரக கார். அதாவது பியட் பத்மினி, அம்பாசிடர் கார்களை ஒப்பிடும் போது மாருதி 800 தான் நவீன மகிழுந்து. […]

Categories
தமிழ் நினைவுகள்

பாம்பன் பாலத்தின் நினைவுகள்

இந்தியாவின் முதல் கடற்பாலம் என்ற பெருமையோடு அல்லாமல் 2010 மும்பையின் பாந்த்ரா பாலம் திறக்கப்படும் வரை, மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் தன்னுள்ளே தக்கவைத்திருந்த பாலம்.