Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

உலகின் மூத்த குடி – தொல்பொருள் சொல்லும் தமிழக வரலாறு

உலகின் மூத்தகுடி உன்னதமான எமது தமிழ்க்குடி என்று மார்தட்டிப் பெருமை பேச வேண்டிய தருணம் இது. அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகுத்தி என்ற வரிகளைப் படித்து விட்டு வாய்ச் சவடால் என்று சொல்லும் காலம் மறைந்து விட்டது. சிந்து சமவெளி தான், இல்லை இல்லை, ஐரோப்பியா தான், அட அதுவுமில்லை, எகிப்துதான், அப்ப சீனா என்ன தக்காளியா என்று நாகரீகத்தின் முன்னோடி நாங்கள் தான் என்று ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு வரலாற்றை எழுதி அதை ஒரு தலைமுறை […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

வாகை சூடியவரை வாழ்த்துவோம். வெற்றியாளர்களை வளர்த்தெடுப்போம்.

நேற்றைய பரபரப்பான செய்தி, அனைவருக்கும் பரவசமளித்த செய்தி இந்தியாவின் இளம் வீரர் சதுரங்கப் போட்டியில் உலகளவிலான முதலிடம்பெற்று வாகை சூடிய செய்தி. அதுவும் அதில் மேலும் சிறப்பம்சம் என்பது இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது. உலகளவில் சதுரங்கப்போட்டியில் இளம் வயதில் வாகை சூடி வரலாறு படைத்த குகேஷ் தொம்மராஜூ ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.அவரது தந்தை ரஜினிகாந்த் தனது மருத்துவப் படிப்புக்காக, சென்னை வந்து இங்கேயே தங்கிவிட்டார். அவர் காது, மூக்குத் தொண்டை நிபுணர். […]

Categories
இலக்கியம் தமிழ்

இராஜ இராஜ சோழன் – புத்தகப் பரிந்துரை

புத்தகப் பரிந்துரை. பயிற்று பதிப்பகம் வெளியிட்டுள்ள, திரு.இரா.மன்னர் மன்னன் எழுதிய இராஜ இராஜ சோழன் புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இந்தப் புத்தகத்தை நாம் படிக்கும் போது, தஞ்சை பெரிய கோவிலின் முழு வடிவமைப்பு ரகசியத்தையும் அறிந்து கொள்ளலாம். நிழல் கீழே விழாதா?கோபுரம் ஒரே கல்லால் ஆனதா? போன்ற பல கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் விடை இருக்கிறது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து பல பூகம்பத்தையும் தாண்டி கம்பீரமாக நிற்க என்ன காரணம் […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வன்முறை எதற்கும் தீர்வல்ல!

சில நினைவுகள் இனிமையாகவும், சில நினைவுகள் தீராத ரணமும் தரும் விதமாக அமைவது இயற்கை. அப்படி இனிமையாக அல்லாத நினைவுகள் நல்ல பாடத்தை தரும் என்பதில் ஐயமில்லை. சமகால வராலாற்றில் மறக்க முடியாத நாள் செப்டம்பர் 11,2001. உலகத்திற்கே தீவிரவாதத்திற்கு எதிரான பெரிய படிப்பினையைத் தந்த மிகக் கொடுமையான ஏற்றுக்கொள்ளப்படாத அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த நாள். அமெரிக்காவிலிருந்த உலக வர்த்தக மையம் மற்றும் பாதுகாப்புத்துறையின் பென்டகன் கட்டிடம் ஆகியவை தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்ட நாள். […]

Categories
தமிழ் வரலாறு

பூலித்தேவர்- வெள்ளையர் எதிர்ப்பை முன்னெடுத்த வீரரின் வரலாறு

இந்திய சுதந்திரப்போர் வேட்கையை முதலில் தூண்டிய ஒரு வீரனை சற்று நினைவில் கொள்ளலாம். இது வேலூர் சிப்பாய் கலகத்திற்கெல்லாம் முன்னோடியாக 1751 லேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரனின் கதை. இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் என்ற ஊரை தலையிடமாகக் கொண்ட பாளையத்தின் அரசன் பூலித்தேவனை சற்றே நினைவில் கொள்ளலாம். நெற்கட்டான் செவல் மருவி நெற்கட்டும்செவல் என அர்த்தமே மாறி நிற்கிறது. அதையும் கட்டுரையில் பார்க்கலாம். முதலில் பாளையத்தின் வரலாறு. பூழி நாடு:1378 […]

Categories
குட்டி கதை தமிழ் வரலாறு

பண்டைய தமிழகத்தின் நாகரீகம் – கற்றோர் சிறப்பு

பண்டைய தமிழகத்தில் முதல், இடை, கடை என்ற மூன்று சங்க காலங்களிலும் தமிழை வளர்த்த புலவர்கள் பெரும் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்ந்தார்கள் என்பதை அறிவோம். அதில் நமக்கு வந்து சேர்ந்த சில கதைகளைத்தான் நாம் சற்று நினைவில் கொள்ளப் போகிறோம். “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவபெருமானையே குற்றம் சாட்டிய நக்கீரர் பெருமானை அறயாதோரும் இலர். தன் உயிரை விட தமிழ் வளர்க்கும் மூதாட்டியின் உயிரே முக்கியம் என ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைத் தந்த […]

Categories
தமிழ் வரலாறு

நம்ம ஊரு மெட்ராஸு – சென்னையின் கதை

வந்தாரை வாழ வைக்கும் சென்னை. வடக்கு பகுதியிலருந்த வந்த இந்தியர்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை அளிக்கும் சென்னை. அவர்கள் ஊர்களை, மாநிலத்தை விட சென்னை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதாக பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம். தமிழகத்தின் தலைநகரம், ஆசியாவின் டெட்ராய்ட், தென்னிந்தியாவின் நுழைவுவாயில், முதலீட்டாளர்களின் முதல் விருப்பம் என பல பெருமைகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரின் பிறந்தநாள் இன்று. ஆகஸ்ட் 22,2024 ல் சென்னை இன்று 385 ஆவது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறது. அதென்ன ஆகஸ்ட் 22? […]

Categories
இலக்கியம் கருத்து தமிழ் பாடல்

வள்ளியம்மா பேராண்டி – இசைதொகுப்பின் ஆய்வு

பிரிவின் வலியை சொல்லும் ராசாத்தி என்ற பாடலை பற்றி அருண் பாரதி இங்கு எழுதுகிறார். அதே பெயரில் ஒரு பாடலை கொண்ட சமீபத்தில் வெளியாகியிருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற இசைத்தொகுப்பை பற்றி இந்த கட்டுரை. பிக்சன் பிக்சன் (பெரிய மகன்) என்று இவரது அம்மாவும் அப்பாவும் அழைக்க, பிக்சன் இன் உலகத்துக்குள் நுழைகிறோம். “பொக்க பொக்க பொக்கை வள்ளி பாட்டி, you‘re மை ஸ்வீட்டி” என்று விளையாட்டாக ஆரம்பமாக்கிறது இவரது கதை. பிக்சன் என்பவர் வேறு யாருமில்லை […]

Categories
தமிழ் வரலாறு

சுதந்திர போராட்ட சுவடுகள் – ஜாலியன்வாலா பாக்

78 ஆவது சுதந்திர தினத்திலே அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நமது சுதந்திரத்திற்கு காரணமான தியாகங்களை ஒரு முறை நினைத்துப் பெருமிதம் கொள்வோம். இந்த சுதந்திரம் எத்தனையோ இன்னல்களைத்தாண்டி நமக்குக் கிடைத்தது. அப்படி சுதந்திரத்திற்காக நடந்த பல சம்பவங்களில் நம் நினைவிலிருந்து நீங்காத சம்பவம் ஜாலியன்வாலாபாக் படுகொலை. அதை நாம் இந்த நன்னாளில் ஒருமுறை நினைவில் கொண்டு அதற்கான சந்தர்பம் அமைந்த சூழல் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம். பஞ்சாப் மாகாணத்தில் அமிர்தசரஸ் என்ற நகரிலுள்ள ஜாலியன் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆடி அமாவாசை – நினைவுகளும் நடப்புகளும்

நினைவுகளுக்கும் இந்த நாளுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. நம்மை விட்டுப் பிரிந்தாலும் நம் நினைவுகளை விட்டு நீங்காமலிருக்கும் நம் முன்னோர்களை நினைத்துக்கொள்ளும் முக்கியமான நாள். தர்ப்பணம் கொடுப்பது, வீட்டிலே படையல் போட்டு பூஜை செய்வது என்று இன்றைய நாளில் இறந்து போன தாத்தா பாட்டி உட்பட அனைவரும் நம் நினைவில், நம் வார்த்தைகளில் ஒருமுறை வந்து போகாமல் இருப்பதில்லை. ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதில் மிக முக்கிய அமாவாசை ஆக கருதப்படுகிறது. புரட்டாசி, தை மாதங்களிலும் தர்ப்பணம் […]