Categories
ஆன்மீகம் தற்கால நிகழ்வுகள்

மகா கும்பமேளா- விமர்சனங்களின் தொகுப்பு

நவீன வளர்ச்சி, நவீன முன்னேற்றம், என்பது போல, நவீன மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை தான். உத்திரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜ்ல் தற்போது நிகழ்ந்து வரும் மகா கும்பமேளாவில் நவீன மூடநம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தையும், சிரிப்பையும் வரவழைக்கிறது. ஆமாம். மகா கும்பமேளாவில் குறிப்பிட்ட நாட்களில் நதியில் புனித நீராடுவது புனிதம், பெரும் பலன் என்று கூறப்படுகிறது. அதை நம்பி குளிக்கச் சென்று கூட்டத்தில் நசுங்கி இறந்தவர்களை நாம் ஏற்கனவே சாடியுள்ளோம். இது மாதிரியான மூட நம்பிக்கை அவசியமா என்று. அதற்குப் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ?

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் , ஆனால் கோவில்பட்டியில் குடிநீருக்கே திண்டாட்டம் என்று முன்னாளில் ஒரு கேலி சொலவடை எங்கள் ஊரில் உண்டு. அதாவது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்த போது இந்த சொல்வடை சொல்லப்படுவது உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை. சும்மா ஒரு கோர்வையான வார்த்தைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது கோர்வைக்காக அல்லாமல் உண்மையாகவே சொல்லப்படலாமோ என்று தோன்றுகிறது. ஆம், இந்து முன்னனி, இந்து ஆதரவு, இந்து முன்னேற்றம், […]

Categories
தற்கால நிகழ்வுகள்

என்று தீருமோ இந்த மூடநம்பிக்கை சோகம்?

இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவிய அதே நாளில் தான் இன்னொரு துக்க செய்தியைக் கேட்டறிந்தோம். மஹா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்காகத் திரண்ட காரணத்தால் 30 பக்தர்கள் மரணம், அதிகமானோர் காயம். இந்தப்பக்கம் நமது மாநிலத்தின் ஆளுநர் சனாதான தர்மத்தைப் பாதுகாப்போம் வளர்ப்போம் என்று பேட்டி கொடுக்கிறார். இப்படி சனாதான தர்மத்தைக் காப்போம் என்று பேட்டி அளிக்கும் எந்த மிகப்பெரிய ஆளுமையும் அந்த கும்ப மேளா கூட்டத்தில் […]

Categories
ஆன்மீகம்

அதிசயங்களா நிகழ்கிறது திருச்செந்தூரில்?

சமீபத்திய காலத்தில் திருச்செந்தூர் கடலில் இருந்து,தினசரி ஏதாவது ஒரு கல்வெட்டு அல்லது சிலை கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. தினசரி என்றால் நித்தமும் அல்ல, அவ்வப்போது ஏதாவது ஒன்று வெளிப்படுகிறது. காரணம் கடல் அரிப்பு. இந்த கடல் அரிப்பு காரணமாக ஏற்கனவே கடல் வெளியில் கிடந்து மறைந்து போன தேவையற்ற பொருட்கள் ஒவ்வொன்றாக வெளியேறுகிறது. ஆமாம். முன்பு கோவில் புணரமைக்கப்பட்ட போதோ, சீரமைக்கப்பட்ட போதோ ஏதோ ஒரு கல்வெட்டு எழுதப்பட்டு, பிறகு அது உபயோகப்படுத்தப்படாத காரணத்தால் கடற்கரையிலேயே […]

Categories
அறிவியல் ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

தை பிறந்தால்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கு இன்றளவிலும் பொதுமக்களால் நம்பப்படுகிறது. விவசாயம் என்பது பிரதான தொழிலாக இருந்த போது, அறுவடை முடிந்து தை மாதம் அனைத்தையும் கடவுளுக்கும் சூரியனுக்கும் படைத்து வழிபட்ட பிறகு, விளைச்சலை விற்றுப் பணமாக்கி, அதன்மூலமாக வருவாய் ஈட்டுவது வழக்கம். அதனால் தான், தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற சொல்லாடல் வந்தது. தைப் பொங்கல் என்பது தமிழனின் சிறப்பான பண்டிகை, மாட்டுப் பொங்கல் என்பது விவசாயத்திற்கு உற்ற துணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

தேவையா இந்த அவலம்? – ஏகாதேசி நெரிசலில் பக்தர்கள் உயிரிழப்பு

நாம் அடிக்கடி விமர்சிக்கும் அதிதீவிர பக்தி, அல்லது மிதமிஞ்சிய பக்தி அல்லது விளம்பரத்திற்கான பக்தி அல்லது போட்டிக்கு பக்தி, எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அதன் விளைவு இன்று விபரீதமாகி இருக்கிறது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை தரிசித்தே தீருவேன் என்று கூட்டம் கூட்டமாக ஆட்டு மந்தை போல முண்டியடித்த மக்கள். மூச்சு முட்டி இதுவரை 5 பேர் இறந்திருக்கிறார்கள்.இனியும் எண்ணிக்கை கூடலாம் என்றும் சொல்லப்படுகிறது. பலர் காயமடைந்திருக்கிறார்கள், மயங்கி விழுந்திருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறு […]

Categories
ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார் உங்க நியாயம்? – திருச்செந்தூர் பயண அனுபவம்

மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தி என்பது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் குறள் 10 இறைவனின் திருவடிகளை அடைந்தவரால் மட்டுமே இந்தப்பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும் என்பது வள்ளுவர் வாக்கு. இறைவனின் திருவடியை அடைவது எப்படி? கள்ளம்கபடமில்லா பக்தியும், சக உயிர்களுக்கு நாம் செய்யும் உதவியும், நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை நெறியும் தான் நம்மை அந்த இறைவனின் திருவடியில் சேர்க்கிறது. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பக்தி என்பது என்ன என்பதை […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஐயப்பனுக்கே தீட்டா? அபாய மூடநம்பிக்கையின் அடுத்த அடி.

ஐயப்ப பக்தர்கள் வாவர் சமாதிக்குச் சென்றுவிட்டு, தரிசனத்திற்கு வருவது தீட்டு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மாதிரியான விஷயங்களைத்தான் நம் நினைவுகள் பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம். நாம் என்றுமே சாமி கும்பிடுவதையோ, மாலை அணிந்து விரதம் இருக்கும் சாதாரண மற்ற பிற விஷயங்களையோ எதிர்த்தோ, கேலியாகவோ பேசியது இல்லை. திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்ததா இல்லையா என்பதே உறுதி ஆகாத முன்பு தீட்டுக் கழிக்கிறேன் என்று ஹோமம் நடத்தியதைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம். கடவுள் என்பதன் பொருள், […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கோவில் யானையின் கோவம் – யார் தவறு?

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி, பாகன்கள் இருவர் பலியான சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது. இது சம்பந்தமாக வலைதளத்தில் சில கருத்துகள் பரவி வருகிறது. அதாவது மிருக குணம் கொண்ட காட்டு மிருகமான யானை வளர்க்கத் தகுந்ததல்ல.அதை அதன் போக்கில் விடுவதே சரி. இப்படி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து வேடிக்கை காட்டி, சம்பாதிப்பது தவறு என்ற ரீதியில் பலரும் பேசி வருகின்றனர். இந்த விஷயத்தில் நாமும் அதே பக்கத்தில் தான் நிற்கிறோம். பல நேரங்களில் பக்தி என்பது […]