Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் மறைவு

எல்லார்க்கும் பெய்யும் மழை -நல்லார் நினைவுகள்

மழை. நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)எல்லார்க்கும் பெய்யும் மழை. ஔவையார், 10 மூதுரை இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது. மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் […]

Categories
நினைவுகள்

மாடி பஸ்- கம்பீரமான இரட்டை அடுக்குப் பேருந்தின் நினைவுகள்

மாடி பஸ். உண்மையிலேயே அந்த வகைப் பேருந்தின் பெயர் இதுதானா என்பது தெரியாது. ஆனால் மாடி பஸ் என்று சொன்னாலே எல்லாருக்கும் கண்டிப்பாகப் புரிந்து விடும். ஆமாம் டபுள் டக்கர் பஸ் என்று ஆங்கிலத்திலும், மாடி பஸ் என்று தமிழிலும் வழக்காடலாக இருந்தது அந்த வகைப் பேருந்து.இதில் பஸ் என்பது தமிழ் வார்த்தை என்றே பலரும் நம்பியிருந்ததும் உண்மை. இதன் உண்மையான தமிழாக்கம் இரட்டை அடுக்குப் பேருந்து என்பதாகும். ஆனால் அதைச் சொன்னால் பலருக்கும் விளங்காது. சரி […]

Categories
தமிழ் நினைவுகள்

புளிய மர நிழற்சாலை

இருபுறமும் புளிய மரம் நிழல் தந்த மதுரை ரோடு. ஆம். மதுரை வரை மட்டுமே எங்கள் உலகம். அந்த ரோடும், மதுரையோடு முடிந்து விடும் என்று எண்ணிய சிறு வயது. மெட்ராஸ் என்ற ஊர் தெரிந்தாலும். அந்த ஊருக்கு, நம்ம ஊரில் இருந்து ரோடு கிடையாது என்ற எண்ணம். மதுரை ரோடு என்றாலே பயம்.வண்டியெல்லாம் வேகமா வரும்.நிறைய பேரு ஆக்ஸிடன்ட்ல இறந்திருக்காங்க.புளிய மரத்துல பேயா இருப்பாங்கனு. ஆனா, மதுரை ரோடு தரும் பரவசம், வேற எங்கும் கிடைப்பதில்லை. […]

Categories
தமிழ் நினைவுகள்

சொர்க்கமே என்றாலும்…

சொர்க்கமே என்றாலும்… இதுக்கப்புறம் யாருக்கும் விளக்கத் தேவையில்லை. என்னைப் போலவே இதை வாசிப்பவர்களுடைய எண்ணமும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று இந்நேரம் வீட்டின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும். பாவம் அந்த வீடு தான் நம்மை விட்டுப் பிரிந்து ஏங்கிக் கிடப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த வீட்டிற்குத் தெரியாது, அதை விட்டுப் பிரிந்த காரணத்தால் நாம் ஒவ்வொரு நாளும் எப்படியெல்லாம் வாடுகிறோம், தேடுகிறோம் என்று. பிழைப்புக்காக வந்த ஊரில் கால் கடுக்கவோ, அல்லது மூளையைப் பிழியும் அளவிற்கோ […]

Categories
விளையாட்டு

பார்டர் – கவாஸ்கர் கோப்பைத் தொடர் நினைவுகள் 

கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த போட்டிகளில் ஒன்றாக பார்டர் கவாஸ்கர் தொடரை சொல்லலாம். குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் உலக கோப்பைக்கு நிகரான மதிப்பு இதற்கு உண்டு. இது ஏன் என்று பெரிய விளக்கம் தேவை இல்லை. கடந்த 30 ஆண்டு காலத்தில் உலக கிரிக்கெட்டின் தலை சிறந்த அணி ஆஸ்திரேலியா. அவர்களை அவர்கள் நாட்டில் வீழ்த்துவது இந்தியாவை இந்தியாவில் வீழ்த்தத்துவது போல பிரம்மப் பிரயத்தனம்.  கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம், பல இந்திய அணிகளின் முயற்சிக்குப் பிறகு 2018இல் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நடத்தைமீறல்.

நான் எனது தாயார் மற்றும் உறவினரோடு, சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்பட்டிக்கு TN 67 N 1189 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தில் 16 நவம்பர், மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, 5.45 மணிக்கு வந்தடைந்தவாறு பயணித்தேன். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நாங்கள் நிற்கும் போதே நல்ல மழை. சரியாக 4.15 மணிக்கு நாங்கள் அந்த பேருந்து நடத்துனரிடம் பேருந்து எப்போது கிளம்பும் என கேட்டதற்கு 5 மணி ஆகும் என ஆட்களைப் புறக்கணிக்கும் […]

Categories
சினிமா தமிழ் நினைவுகள்

என் பெயர் கமலஹாசன்

பசுந்தோல் போத்திய புலி அல்ல நான். பசுவும் அல்ல. நான் நல்லவனா? இல்லை கெட்டவவனா?இரண்டுமே அல்ல. அதை முடிவு செய்யும் உரிமையும் என்னிடமே உள்ளது. அந்த வகையில் கொஞ்சம் சிறப்பானவன் தான். இதுதான் ஒழுக்கம், இதுதான் கலாச்சாரம் என்பதைப் பின்பற்றி எப்போதும் வாழ்ந்தவனில்லை நான். என்னவோ தெரியவில்லை, என்னை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒருபோதும் தனிமனித ஒழுக்கத்தை நான் மீறியதில்லை. என் போக்கில் என் வாழ்க்கை. யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்லை. யாரையும் கெடுத்ததும் இல்லை. பிறரின் பேச்சுக்கு […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்க்கை அனுபவம்: அன்பை விதைப்போம்

சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் என்ற திரைப்படத்தை மக்கள் வெகுவாகப் பாராட்டியது நம் அனைவருக்கும் தெரியும். இது ஒரு நல்ல ஒற்றுமை எண்ணம் கொண்ட சமுதாயத்தை நமக்குக் காட்டுகிறது. ஆம். ஒரு நல்ல இராணுவ வீரனைப்பற்றிய படத்தைப் பார்த்து நாம் அனைவரும் பாராட்டுவது ஒரு நல்ல தேசப்பற்று மிக்க சமுதாயத்தைக் காட்டுவது போல, குடும்ப உறவுகள் விட்டுப் போகக்கூடாது என்ற ரீதியில் எடுக்கப்பட்ட அந்தப்படம் இத்தனை வெகுவாகப் பாராட்டப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒற்றுமையை நோக்கும் சமுதாயத்தைக் காட்டுவதாகத் தானே […]

Categories
தமிழ் நினைவுகள்

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்?

உறவாக வாழ்ந்தவர்கள் உடலாக மட்டுமே நம்மோடு வாழ்ந்தவர்கள் அல்ல. நமது நினைவுகளிலும், உயிரிலும் கலந்த அவர்கள் மண்ணுலகிலிருந்து பூத உடலை விட்டுப் பிரிந்தாலும், நம்மிடையே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர அதிக காலம் தேவைப்படுகிறது. ஆறுதலுக்காக மட்டுமே ஆன்மா என்ற வார்த்தை உருவாக்கப்பட்டிருந்தால் இங்கே பாதி பேர் நடைபிணம் தான். அனுபவத்தில் பிறந்தது தான் ஆன்மா என்ற அந்த சொல். நம்மை விட்டுப் பிரிந்த நமது உறவு உன்னதமான ஆன்மாவாக என்றென்றும் நம்மோடு வாழ்வதை […]

Categories
தமிழ் வரலாறு

தியாகி அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள். தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார் போன்ற தலைவர்களோடு கம்பீரமாக நிற்கும் அஞ்சலையம்மாள். இது யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சில காலத்திற்கு முன்பே பள்ளிப் புத்தகங்களில் இவரைப்பற்றிய குறிப்புகள் பாடமாக இணைக்கப்பட்டது. இன்று நான் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது இந்தக் கேள்வி எழாமல் இல்லை. யார் இந்த அஞ்சலையம்மாள் என்று. இவர் யாரென்று பார்க்கலாமா? முதலில் இவர் பெற்ற பெரும்புகழை ஆராயலாம். சில காலத்திற்கு முன்பு […]