Categories
நினைவுகள்

குழந்தைகள் அழுதுவிட்டன, நாம் என்ன செய்ய?

ஆம் குழந்தைகள் அழுதுவிட்டன.நாம் என்ன செய்ய? ஒரு குடும்பமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒன்றுகூடும் போது, நமது உறவினர்களை கண்டுகளித்து உறவாடி மகிழும் போது மனதிலிருக்கும் பாரமெல்லாம் காணாமல் போகும். அந்தக்காலங்களில் ஏதாவது சின்ன சின்ன விஷேசமாக இருந்தாலும் மொத்தக் குடும்பத்தையும் கூப்பிட்டு விழாப்போல நடத்திய வழக்கம் உண்டு.விஷேச வீட்டாரின் வசதிக்கு ஏற்றார் போல, விருந்தும் மற்ற உபசரிப்புகளும் இருக்கும். விஷேச வீட்டினர் எத்தகைய வசதியோடிருந்தாலும், மொத்த சொந்தமும் வந்திருந்து விழாவை சிறப்பித்து விட்டுச் சென்ற வழக்கம் […]

Categories
நினைவுகள்

காணாமல் போகும் அண்ணாச்சி கடைகள்

மளிகைக் கடை அண்ணாச்சிகளும், அவர்களின் கேலியான பேச்சுகளும் என்றைக்குமே நினைவிலிருந்து நீங்கா இனிமை. ஒரு மளிகைக்கடை அண்ணாச்சி என்பவர் அந்த குறிப்பிட்ட பகுதியின் மாட்டுவண்டி அச்சாணி போல இருந்த காலம் மாறி இப்போது இணைய வழிப் பொருட்கள் வியாபாரத்தின் அதிகரிப்பால், அண்ணாச்சிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறி வருகிறது. சிரித்து ஜனரஞ்சகமாகப் பொருட்களை வியாபாரம் செய்து, அதில் ஒரு உறவு ஏற்படுவது அண்ணாச்சிகளின் காலம். உதாரணத்திற்கு, “என்ன அண்ணாச்சி நேத்தே லிஸ்ட் குடுத்தேன், இன்னும் சாமான் போட்டு வக்கலியா?“ […]

Categories
நினைவுகள்

தூங்கவிடா நியாபகங்கள்.

எப்போதும் நமது சொந்த அனுபவம் பிறர் அனுபவத்தோடு ஒத்துப் போகும்.அதுவும் சிறுவயதில் நாம் நமது சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு விடுமுறைக்குப் பயணிப்பது அலாதியான அனுபவம். சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்திலும் கூட அந்த உணர்வு மெலிதாகக் கடத்தப்பட்டிருக்கும். அப்படியான என்னுடைய அனுபவம், எனது அம்மா வழி தாத்தா பாட்டி ஊர் மற்றும் வீடு , மற்றும் எனது அத்தை மாமா ஊர் மற்றும் வீடு. இரண்டும் வேறு வேறு விதமான அனுபவங்கள். முதலில் எனது அத்தை மாமா […]

Categories
அறிவியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

விளக்கேற்றி கைதட்ட வேளை வந்துவிட்டதா?

நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது. மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம். ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

நினைவுகள் – 2024 – ஒரு  பார்வை

நினைவுகள் என்பது சாபமா, வரமா? என்றால் அது அறுதியிட்டுக் கூற முடியாத ஒன்று. எதைப்பற்றிய அல்லது எப்படியான நினைவுகள் என்பதைப் பொறுத்தே அது சாபமா அல்லது வரமா என்பது அமைகிறது. மகிழ்ச்சி தரும் நல்ல நினைவுகளோ அல்லது வருத்தம் தரும் துயர நினைவுகளோ இரண்டும் இரவு பகல் போல ஒன்றில்லாமல், இன்னொன்றில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டும் அதற்கு மாற்றில்லை. நல்ல சுகமான நினைவுகளும் இருந்தது. சில துக்கமான நிகழ்வுகளும் இருந்தது. அப்படி நாம் கடந்த அந்த […]

Categories
சினிமா நினைவுகள் மறைவு

ஒப்பற்ற அன்பாளன் மறைந்து ஓராண்டு கழிந்தது.

ஒரு மனிதனின் பிரிவுக்காக, அவன் தாய் அழுதால் அவன் நல்ல மகன், அவனது பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன், அவனது மனைவி அழுதால் அவன் நல்ல கணவன், ஆனால் நாடே அழுதால் அவன் நல்ல தலைவன் என்ற வசனம் இவருக்கு சினிமாவில் மட்டும் பொருந்தவில்லை. சென்ற ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்தது. மெரினாவில் இருந்த கடற்கரை கோயம்பேட்டிற்கு இடம் மாறியதாக கண்ணீர் ததும்ப மக்கள் அலை […]

Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

மறைந்தார் மன்மோகன் சிங்

ஒவ்வொரு இந்தியரும் மறக்க முடியாத டிசம்பர் 26 ஆம் தேதியில் இன்னொரு துயரச் செய்தி. நம் அனைவருக்கும் விருப்பமான நல்லதொரு மனிதன். அமைதியான, அற்புதமான மனிதன் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார். இவர் பிரதமர் என்ற பதவியை அடையும் முன்பாகவே, நிதியமைச்சராக, பொருளாதார நிபுணராக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இந்தியப் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்துள்ளார். இவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை இந்தியாவை […]

Categories
நினைவுகள் மறைவு

அப்பாவுடன் பயணம்- இனிய நினைவுகள்.

பயணம் என்றுமே இன்றியமையாத ஒன்று தானே?ஆறறிவு கொண்ட மனிதர்க்கு மட்டுமல்ல, பறவைகளும் கூட தங்கள் வாழ்நாளில் பயணம் மேற்கொள்வதை அறிவோமே? வாஸ்கோடகாமா மேற்கொண்ட பயணம் உலக வரைபடத்தில் பல மாற்றங்களை உண்டு செய்தது.அப்படி உலக வரைபடம் மாறாவிடினும் ஒவ்வொரு பயணத்தின் போதும் நம் உள்ளம் குறைந்தபட்சம் மாறுபடுவது உண்மை தானே? என் தந்தையுடன் மேற்கொண்ட சில பயணங்களின் தொகுப்பை கதையாக்கி அசை போடுவதை, முடங்கி கிடக்கும் இந்த சமயத்தில் நான் ஆறுதலாக நினைக்கிறேன். எல்லாக் குழந்தைகளையும் போல […]

Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]

Categories
சினிமா நினைவுகள்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட சினிமா- சொல்லத்துடிக்குது மனசு

வித்தியாசமான கதை அம்சம் கொண்டதும், கநைகளுக்கு முக்கியத்துவம் தருவதுமான படங்கள் சமீபத்தில் தான் வருவதாகவும், பழைய படங்களில் பெரும்பாலானவை, கதாநாயகர்களுக்கு மாஸ் காட்சிகளும், சண்டையும், காதலும் என காட்சிகளைக் கொண்ட படமாகவே அமைந்ததாகவும் சினிமா ரசிகர்கள் பலரும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இப்போது மட்டுமல்ல, 80,90 களிலும் அதுமாதிரியான படங்கள் வெளிவரத்தான் செய்தன என்பதை நிரூபிக்கும் படம் தான் 1988 ல் வெளிவந்த சொல்லத் துடிக்குது மனசு திரைப்படம். நவரச நாயகன் கார்த்திக் நடித்த […]