Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கிளி (கிழிந்த) ஜோதிடம் – அனுபவங்கள்

ஜோதிடம், ஜாதகம், ஓலைச்சுவடி, கிளி ஜோசியம், கை ரேகை பலன், என்று விதவிதமாக, மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும்? என்ற ரீதியில் பல கோணங்களில் கணித்து சொல்ல பல வகையான ஆட்களை காண முடிகிறது. பெரும்பாலும் ஜாதகம் அதில் பிரதானமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தும் முன்பு இருவரின் ஜாதகங்களும் ஒப்பிடப்பட்டு நன்கு ஆராயப்பட்ட பிறகே பத்திரிக்கை அடிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் இருவரின் மனம் […]

Categories
தமிழ் வரலாறு

நம்ம ஊரு மெட்ராஸு – சென்னையின் கதை

வந்தாரை வாழ வைக்கும் சென்னை. வடக்கு பகுதியிலருந்த வந்த இந்தியர்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை அளிக்கும் சென்னை. அவர்கள் ஊர்களை, மாநிலத்தை விட சென்னை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதாக பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம். தமிழகத்தின் தலைநகரம், ஆசியாவின் டெட்ராய்ட், தென்னிந்தியாவின் நுழைவுவாயில், முதலீட்டாளர்களின் முதல் விருப்பம் என பல பெருமைகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரின் பிறந்தநாள் இன்று. ஆகஸ்ட் 22,2024 ல் சென்னை இன்று 385 ஆவது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறது. அதென்ன ஆகஸ்ட் 22? […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

நூற்றாண்டு கண்ட கலைஞர் புகழ்

தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் இவரது பங்கு எல்லையற்றது. கூட்டணி சாதுர்யம், ஆட்சியில் நற்கவனம், மற்றும் பலவகையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வல்வராகிய கலைஞர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியல்வாதி என்றாலே நேர்மறையான விமர்சனங்களுக்கு ஈடாக எதிர்மறையான விமர்சனங்களும் இருப்பது நிதர்சனம் தான். ஆனால் நாம் இப்போது அந்த எதிர்மறை விமர்சனங்களை மறந்து அவரிடமிருந்து நாம் பெற்ற இனிய நினைவுகளை மட்டுமே சற்று ஆராயலாம். கலைஞர் என்ற பட்டம் அவரது எழுத்து அவருக்குக் கொடுத்த பரிசு. […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

பறிபோகும் பாரியின் பறம்பு மலை

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி, அதாவது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி ஆண்ட பறம்பு மலை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. பறம்பு மலை என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்த மலை பிறகு திருநெலக்குன்றம் எனவும், சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும் அழைக்கப்பட்டு இப்போது ப்ரான் மலை என்றும் அறியப்படுகிறது. இது தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 42 கிமீ தொலைவில் மேற்கிலும், மதுரையிலிருந்து 63 கிமீ தொலைவில் வடக்கிலும் அமைந்துள்ளது. சங்க காலத்தில் […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

கிராமத்து கசாப்புக் கடையின் நினைவுகள்

ஒரு தோராயமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி அல்லது பேரூராட்சிகளில் இருக்கும் கசாப்பு கடைக்காரர்கள் அனைவரும் இதுபோல இருக்கலாம். இது எனது ஊரின் கசாப்புக் கடைக்காரரைப் பற்றிய எனது நினைவுகள். பளபளப்பான கட்டிடம், டைல்ஸ் பதித்த தளமெல்லாம் கிடையாது. ஒரு சின்ன பெட்டிக்கடை அளவில் இருக்கும் கசாப்புக் கடையில், அந்த கடைக்காரரும் அங்குள்ள ஒரு வேலை ஆளும், அவர்கள் இருவரும் கறிவெட்டும் கட்டைகள், இவை மொத்தமும் அந்த இடத்தை ஆக்கிரமித்து விடும். வேலை ஆள் என்பவர் பெரும்பாலும் […]

Categories
இலக்கியம் கருத்து தமிழ் பாடல்

வள்ளியம்மா பேராண்டி – இசைதொகுப்பின் ஆய்வு

பிரிவின் வலியை சொல்லும் ராசாத்தி என்ற பாடலை பற்றி அருண் பாரதி இங்கு எழுதுகிறார். அதே பெயரில் ஒரு பாடலை கொண்ட சமீபத்தில் வெளியாகியிருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற இசைத்தொகுப்பை பற்றி இந்த கட்டுரை. பிக்சன் பிக்சன் (பெரிய மகன்) என்று இவரது அம்மாவும் அப்பாவும் அழைக்க, பிக்சன் இன் உலகத்துக்குள் நுழைகிறோம். “பொக்க பொக்க பொக்கை வள்ளி பாட்டி, you‘re மை ஸ்வீட்டி” என்று விளையாட்டாக ஆரம்பமாக்கிறது இவரது கதை. பிக்சன் என்பவர் வேறு யாருமில்லை […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

தமிழ் புதல்வன் – கல்வி ஊக்க திட்டம்

“பிச்சை புகினும் கற்கை நன்றே“ ஒருவருக்கு பிச்சை எடுக்கும் நிலை வந்தாலும் கல்வி கற்பதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறிய ஔவையின் வழிவந்த தமிழ் சமூகத்தில், நீ நல்லா படி, நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று அரசாங்கமே பல திட்டங்களை முன் எடுத்து செய்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக பல சந்தர்ப்பங்களிலும் இருந்து உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நல்ல கல்யறிவு மற்றும் அதிகப்படியான பெண்கல்வி விகிதம் இருக்கும் மாநிலம் என்ற ரீதியில் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஊக்கமது கைவிடேல் – வினேஷ் போகாட்டின் ஒலிம்பிக் பயணம்

ஒரு செயலை செய்யும் போது அதற்கான பலன் கிடைக்காவிட்டால் சோர்வடைந்து அந்த செயலில் இருந்து பின்வாங்குதல் என்பது நம்மில் பலருக்கும் வாடிக்கையான ஒன்று. அப்படியான நமக்கான ஒரு முன்மாதிரி வினேஷ் போகட். இன்று இந்தியர்களின் இதயம் நொறுங்கிப்போக காரணமானவர். ஆனால் அவரும் பிறக்கும் போது நம்மைப்போன்ற ஒரு சாதாரண ஆள்தானே? மல்யுத்தத்தில் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிக்குத் தகுதியான ஒரே இந்தியப் பெண்மனி என்ற சாதனை புரிந்து, அடுத்த நாளே இறுதிப்போட்டிக்கு தகுதியான ஆள் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்ற வரலாறையும் […]

Categories
கருத்து தமிழ்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் – அனுபவங்கள்

நிலைகுலைந்து வரும் பொது ஒழுக்கம். தனிமனித ஒழுக்கம் அல்லது பொது ஒழுக்கம் என்பது தற்போது பரவலாக வெகுவாக நிலைகுலைந்து வருகிறது. தண்ணீரை வீணாக்குவது, குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது, போக்குவரத்து விதிமுறைகளில் அத்துமீறல், இப்படி சிறிய விஷயங்களில் துவங்கி, குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு, வருமான வரி ஏய்ப்பு என்று பெரிய விஷயங்கள் வரை பொது மக்கள் தங்கள் சுய மற்றும் பொது ஒழுக்கத்தில் தவறி தான் இருக்கிறார்கள் என்பது 100 சதவீத உண்மை. ஒரு அரசு அதிகாரி, […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆடி அமாவாசை – நினைவுகளும் நடப்புகளும்

நினைவுகளுக்கும் இந்த நாளுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. நம்மை விட்டுப் பிரிந்தாலும் நம் நினைவுகளை விட்டு நீங்காமலிருக்கும் நம் முன்னோர்களை நினைத்துக்கொள்ளும் முக்கியமான நாள். தர்ப்பணம் கொடுப்பது, வீட்டிலே படையல் போட்டு பூஜை செய்வது என்று இன்றைய நாளில் இறந்து போன தாத்தா பாட்டி உட்பட அனைவரும் நம் நினைவில், நம் வார்த்தைகளில் ஒருமுறை வந்து போகாமல் இருப்பதில்லை. ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதில் மிக முக்கிய அமாவாசை ஆக கருதப்படுகிறது. புரட்டாசி, தை மாதங்களிலும் தர்ப்பணம் […]