Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவையற்ற நுகர்வு தெருவில் தான் சேரும்.

குழம்ப வேண்டாம். நிறுத்துமிடமில்லாமல் இல்லாமல் கார் வாங்கக் கூடாது என்ற அரசாங்க நடவடிக்கை பற்றிய சிந்தனை. சமீபத்திய பகட்டுக் கட்டுரையில் நாம் பேசிய பல விஷயங்களைப் போல இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கார் வாங்குறீங்களே?அத நிறுத்த இடமிருக்கா? இந்தக் கேள்வியை அது வரை யாருமே கேட்டதில்லை. இது வரை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவ்வளவு தான்.உங்களுக்கு சிலர் எவளோ, பான் கார்டு , ஆதார் கார்டு கொடுங்க, 0 டவுன் பேமண்ட்ல அடுத்த மாசம் கார் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

தனியார் நலனுக்காகத் தவிக்கும் மக்கள்.

தனியார் நலனுக்காகத் தவிக்கும் பொதுமக்களின் கதையைப் பார்க்கும் முன்பு நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம். ஒரு பெரிய ஊரில், போக்குவரத்து நெரிசல் இருக்கும் ஊரில், ஒரு மிகப்பெரிய திரையரங்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அங்கே வந்து படம் பார்க்க மக்கள் கூட்டமாக வரப்போவது உறுதி. அந்தத் திரையரங்கம், இருக்கைகளை அதிகப்படுத்திக் கொள்ளை, லாபம் சம்பாதிக்க முடிவெடுத்து, தனக்கு இருந்த நிலத்தில் மொத்தமாக பெரிய அளவில் அரங்கத்தைக் கட்டி விடுகிறது. அது நல்ல திரையரங்கம் என்பதால் அங்கே […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இதற்குத்தானா இந்தப்பாடு?- கிளாம்பாக்கம்   பேருந்து முனையப் பிரச்சினைகள்

எந்தவொரு விஷயத்தையும் உருவாக்குவதைக் காட்டிலும் அதன் பராமரிப்பில் தான் அதனுடைய முழுப்பலனும் கிடைக்கும். சரியாக கவனிக்கப்படாமல், பராமரிக்கப்படாமல் விடப்பட்ட எதுவுமே அதன் பலனைத்தராது. மேலும் அவப்பெயரையும், மனவருத்தத்தையும் உண்டாக்கி விடும். அதை உருவாக்குவதற்கான உழைப்பு விரயமாகிப்போகும். அப்படிப் பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் தாண்டி உருவானது தான் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். ஆனால் அதன் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாகவும், நகரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு காரணமாகவும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளானது மறுக்க முடியாத ஒன்று. ஆரம்ப […]

Categories
கருத்து தகவல்

குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்

குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார்? போதுமா இது? – சிறு குற்றங்களின் தண்டனை விகிதம்

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய குற்றங்களுக்கு இருந்தால் போதும் என்பது பொது சிந்தனை. ஏனென்றால் சிறு சிறு தவறுகளை அன்றாடம் நாம் அனைவருமே செய்து பழகி விட்டோம். உதாரணத்திற்கு ஒரு சாலை வழித்தடத்தில் சிவப்பு விளக்கு சமிஞ்ஞையைத் தாண்டிய குற்றத்திற்காக அபராதம் 10000 அல்லது வண்டி பறிமுதல் செய்யப்படும் என்று சொன்னால் அதை மொத்த ஜனமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக பலர் அதை எதிர்த்து வெடிப்பார்கள். உதாரணத்திற்கு இப்படி வசனங்கள் கிளம்பும்.“கொலை பன்றவன், கொள்ளை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்தின் இனிய பயண நினைவுகள்

அரசுப் பேருந்தில் ஏற்பட்ட கசப்பான நினைவுகளைப் பகிர்ந்தோம். அவர்கள் மீது நாம் கொடுத்த புகாருக்கும் பதில் கிடைத்தது.போக்குவரத்துத் துறையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக்கோரியதோடு, அவர்கள் இருவரையும் கண்டிப்பதாகச் சொன்னார்கள். ஒட்டுமொத்த அரசுப் போக்குவரத்தும் குறை சொல்லத்தக்க வகையில் அல்ல. இது ஒரு அருமையான பயண அனுபவம் பற்றிய பதிவு. சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊருக்கு சென்ற பிறகு குடும்பத்துடன், எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம்..முன்பதிவுகள் அற்ற நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் […]

Categories
நினைவுகள்

மாடி பஸ்- கம்பீரமான இரட்டை அடுக்குப் பேருந்தின் நினைவுகள்

மாடி பஸ். உண்மையிலேயே அந்த வகைப் பேருந்தின் பெயர் இதுதானா என்பது தெரியாது. ஆனால் மாடி பஸ் என்று சொன்னாலே எல்லாருக்கும் கண்டிப்பாகப் புரிந்து விடும். ஆமாம் டபுள் டக்கர் பஸ் என்று ஆங்கிலத்திலும், மாடி பஸ் என்று தமிழிலும் வழக்காடலாக இருந்தது அந்த வகைப் பேருந்து.இதில் பஸ் என்பது தமிழ் வார்த்தை என்றே பலரும் நம்பியிருந்ததும் உண்மை. இதன் உண்மையான தமிழாக்கம் இரட்டை அடுக்குப் பேருந்து என்பதாகும். ஆனால் அதைச் சொன்னால் பலருக்கும் விளங்காது. சரி […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

அரசுப்பணியின் அதிகாரமும், தனித்துவமும்.

அரசுப் பணியாளர்களின் தனித்தன்மை சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று. சென்னை மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம் என்பது. இவர் லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் பூசுவதை நிறுத்த மறுத்த காரணத்தால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் எனவும், அப்படியென்றால் பணியிட மாறுதல் அடைந்த பிறகு மணலியில் லிப்ஸ்டிக் போட்டால் தப்பு இல்லையா என்றும் ஒரு பக்கம் வலைத்தளவாசிகள் வறுத்து வருகிறார்கள். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அவரது பணியிட மாறிதலுக்கு மேயர் அலுவலகம் […]

Categories
தமிழ் நினைவுகள்

சென்னையின் கிரீடம்- கத்திப்பாரா பாலம்

க்ளோவர் இலை வடிவ மேம்பாலம். இந்த வகையான மேம்பாலம் போக்குவரத்து மிக அதிகமான இடங்களில், வாகனங்கள் ஒரு திசையிலிருந்து இரண்டு அல்லது மூன்று திசைகளுக்கு பிரிந்து தடையில்லாமல் செல்வதற்காக ஏற்படுத்தப்படும் பாலம் . இந்தப்பாலங்கள் கீழ்க்கண்ட இந்த இலையின் வடிவில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக, தேவைகளுக்கு ஏற்ப, இணைக்கும் திசைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியா, கலிபோர்னியா, மிச்சிகன், போன்ற மாநிலங்களிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரிலும் இந்த […]

Categories
தமிழ் வரலாறு

நம்ம ஊரு மெட்ராஸு – சென்னையின் கதை

வந்தாரை வாழ வைக்கும் சென்னை. வடக்கு பகுதியிலருந்த வந்த இந்தியர்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை அளிக்கும் சென்னை. அவர்கள் ஊர்களை, மாநிலத்தை விட சென்னை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதாக பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம். தமிழகத்தின் தலைநகரம், ஆசியாவின் டெட்ராய்ட், தென்னிந்தியாவின் நுழைவுவாயில், முதலீட்டாளர்களின் முதல் விருப்பம் என பல பெருமைகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரின் பிறந்தநாள் இன்று. ஆகஸ்ட் 22,2024 ல் சென்னை இன்று 385 ஆவது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறது. அதென்ன ஆகஸ்ட் 22? […]