Categories
கருத்து குட்டி கதை தற்கால நிகழ்வுகள்

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.

நண்பர்கள் இருவர் சித்திரை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில். தான் தங்கியிருக்கும் அறையை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு நல்ல பசியுடன் கடைக்குச் சென்று பார்த்தால் கூட்டம். அமர்ந்து சாப்பிட இடம் கிடைக்காது என்று தெரிந்து உணவுப் பொட்டலம் வாங்கிக்கொண்டு அறைக்குச் செல்கிறார்கள். நல்ல பசி என்பதால், பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் 65 என வகை வகையாக வாங்கிச் சென்றார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் பகிர்ந்து சாப்பிடுவதைப்பார்த்தால்… அடேயப்பா, இதுவல்லவா நட்பு? சாப்பிட்டு முடியும் […]

Categories
கருத்து

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை – சோதனைகள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தினால் நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பாதிப்புகள் உள்ளன என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பணத்தை நாம் கையில் எடுத்து அதை உறவாடி செலவு செய்யும் போது இருக்கும் கவனமும், திருப்தியும், டிஜிட்டல் வழியில் செலவு செய்தால் கிடைப்பதில்லை. மேலும் பணம் நம்மிடம் இருந்து வெளியே போவதை உணராமல் செலவு செய்யும் காரணத்தால், பணத்தை சேமிக்கும் எண்ணமும் குறைந்து வருவதாகவும் பேச்சு உள்ளது. இதில் சேமிப்பு குணம் என்பது வங்கியில் […]

Categories
கருத்து குட்டி கதை தகவல் தற்கால நிகழ்வுகள்

பேராசை பெருநஷ்டம்- இணைய மோசடிக் கதைகள்

பேராசை பெருநஷ்டம் இதனை விளக்க வழக்கமாக சொல்லப்படும் கதைகளில் முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி இருந்தார் என்றும், முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் வளர்ந்த தங்க முட்டையிடும் வாத்து என்றும் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் இதை விளக்குவதற்கு முன்னொரு காலக் கதை எல்லாம் தேவையில்லை. தினம் தினம் செய்திகளில் பேராசையால் பெருநஷ்டமடைந்த பல மக்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு்தான் இருக்கிறோம். ஆன்லைன் மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி, பங்கு பரிவர்த்தனை முதலீடு […]

Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ் பாடல் வரலாறு

உலகின் முன்னோடி தமிழன் – நீதிநெறி வரலாறு

தமிழக மன்னர்களின் நீதிநெறிமுறைகள் பற்றிய சிறிய தகவல்கள். கண்ணகி கோவலனுக்காக வழக்காடிய போது, பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து கொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கூறி அந்த இடத்திலேயே யானே கள்வன் என்று கூறி மரண தண்டனையை ஏற்றக் கொண்டான் என்பதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். இதில் நமக்குத் தெரியாத செய்தி என்னவென்றால் உலக வரலாற்றிலேயே ஒரு நீதிபதி, தன்னைத்தானே குற்றவாளி (யானே கள்வன்) என்று அறிவித்துக் கொண்ட முதல் வழக்கு இது தான். கதை 2: […]

Categories
குட்டி கதை தமிழ்

பட்டினத்தாரின் அனுபவம்

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார். கோவணத்துடன் கிளம்பினார். கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து. ஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார். அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார். வளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத உடம்பில் குத்தி ரணப்படுத்தின. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது […]

Categories
குட்டி கதை தமிழ்

நம்ம வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்குனு தோணுதா?இதப்படிங்க முதல்ல.

கடவுள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மனிதர்களைப் படைக்கிறார். ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை படைக்கப்பட்டவுடன் எல்லாரையும் பூலோகம் அனுப்ப திட்டம் தயார் ஆகிறது. பூலோகம் போகும் முன் கடவுளின் ஏற்பாட்டோடு, ஒரு விருந்தும் தயார் ஆகிறது. மனிதர்களிடம் சொல்லப்படுகிறது.“மனிதர்களே, நீங்கள் பூலோகம் செல்லவிருப்பதால் இங்கே வழி அனுப்பும் விருந்து ஒன்று வைக்கப்படும், சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த அறையில் கடவுள் உங்களை ஆசி கூறி வழி அனுப்புவார். அனைவரும் விரைவாக சாப்பிட்டு வாருங்கள்” என… உடல் படைக்கப்பட்டவுடன், உச்சகட்ட […]

Categories
குட்டி கதை தமிழ்

வடிவேலு, பார்த்திபன் வசன உருவகம் – இராமயணம் சஞ்சீவி மூலிகை காட்சி

அனுமனாக பார்த்திபன். ராமர் வேடத்தில் வடிவேலு. ராமர்: டேய் அனுமாரு இங்க வாடா, நம்ம ஆளுங்களையும் என் தம்பியையும் காப்பாத்தனும்னா, சஞ்சீவி மலையில இருக்கிற மூலிகைய புடுங்கிட்டு வரனும் டா. கொஞ்சம் சீக்கிரம் புடுங்கிட்டு வாடா! அனுமன்: (முணுமுணுத்தபடி) என்னைய பாத்தா பச்செல புடிங்கி மாதிரி தெரியுதா? ராமர்:யப்பா நீதான் நம்ம டீம்ல நான் என்ன சொன்னாலும் செய்வ, அதனால தான் உன்கிட்ட சொல்றேன். கொஞ்சம் கோச்சுக்காம, குரங்கு சேட்டையெல்லாம் செய்யாம, தயவு செஞ்சு கொஞ்சம் சீக்கிரம் […]

Categories
குட்டி கதை தமிழ்

விருந்தோம்பல் – குறளுடன் குட்டிக்கதைகள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல் குறள் 84 மேற்கண்ட திருக்குறளின் பொருளானது, வீட்டிற்கு வந்தவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் நல்ல விருந்தோம்பல் செய்பவர்களின் இல்லத்திலே திருமகள் குடியிருப்பாள். இந்தக் குறளை விளக்கும் விதமாக ஒரு குட்டிக் கதை உள்ளது. இந்தக் கதையின் காலம் தமிழ் கடைச்சங்க காலம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதர் வசித்து வந்தார். அவர் ஒரு வியாபாரி, அவ்வப்போது வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்த காரணத்தால் அவருக்கு […]

Categories
குட்டி கதை தமிழ் தற்கால நிகழ்வுகள்

உருவகக் கதை: தவெக தலைவருக்கு வந்த சோதனை

இன்றைய நாட்களில் மீம்கள் என்ற வகையிலான கேலி உருவகங்கள் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் பிரபலமான காட்சியை வேறொரு நிகழ்வுக்கு உருவகப்படுத்தி கேலி செய்வது நடைமுறை. முன்பும் இது போன்ற கேலி செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் அது கேலிச் சித்திரங்களாகவோ அல்லது எழுத்து வடிவிலோ இருந்தது. உதாரணமாக பாரதியார் நடத்திய இதழில் கேலிச்சித்திரங்கள் பிரபலம். சமீபத்திய இந்து பத்திரிக்கை வரை நாம் அதைக் கண்டிருக்கலாம். அதேபோல, துக்ளக் என்ற வார இதழில் சோ அவர்கள் […]

Categories
சிறுகதை சினிமா தமிழ்

தீதும் நன்றும் பிறர்தரவாரா – சிறுகதை

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற புறநானூறு நூலின் வரிகளை முன்வைக்கும் கதை. இது கற்பனை கதையோ அல்லது வாசித்த கதையோ அல்ல. நான் கண்ட சினிமாவை கதையாக்கி இந்த கருத்தையும் முன்வைக்கிறேன். பேபி என்ற சினிமா. பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்திருந்த படம். படத்தின் கதை இதுதான். மனோஜின் மனைவி தனது முதல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை இறந்து பிறப்பதால் சற்று மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார். பெரிய பாதிப்பாக இல்லாத காரணத்தால் குணமாகி இரண்டாவது முறை […]