Categories
தற்கால நிகழ்வுகள்

முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?

இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. என்ற திருக்குறளை அன்றாடம் சாமானியனும் மனதில் வைத்துக்கொண்டால் சொல்லாடல் எப்போதுமே சுகம் தான். சாமானியனுக்கே சொல்லாடல் அதாவது பேசும் மொழி என்பது முக்கியமானதாகி விட்டது.நாம் பேசும் வார்த்தைகளின் இனிமை தான் நம் எதிரில் இருப்பவரிடம் நமக்கான அடையாளத்தைக் காண்பிக்கும் ஒளித்திரை. அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தின் முக்கிய பிரிவில் மந்திரி பதவி வகிக்கும் அல்லது அந்தப் பதவிக்கான தகுதியுடைய ஒரு மூத்த கட்சி உறுப்பினர் எப்படிப் பேச […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறை

கோடை விடுமுறை. வரப்போகுது கோடை விடுமுறை.துவங்கிவிட்டது பெற்றோர்களுக்குத் தலைவலி. காலையில் எழுப்பி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, பள்ளிக்கூடம் அனுப்புவதைக் காட்டிலும் கடினமான காரியம் கோடை விடுமுறையில் இதுகளைச் சமாளிப்பது. என்ன செய்யலாம்?பேசாம 2 மாசம் தாத்தா, பாட்டிக்கிட்ட அனுப்பிவிடலாமா? நோ நோ மம்மி பாவம். இல்ல இவனுங்கள அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பிரலாமா?அவ கெடந்து அனுபவிக்கட்டும். இல்ல இல்ல, நம்ம இதுகள பத்து நாளைக்கு அனுப்பினா, அவ அந்த ரெண்டு பிசாசுகளையும் 20 நாளைக்கு இங்க அனுப்பிருவா. […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

போதையில் தடுமாறும் பாதை

போதை. இந்த வார்த்தையைக் கேட்டவுடனே நாம் யூகிக்கும் இணைப்புச் சொற்கள் மது, கஞ்சா, சிகரெட், புகையிலை, இப்போது, கொக்கைன், ஹெராயின், போன்றைவையும் இணைப்பில் சேர்ந்து விட்டன. ஆம் தற்போதைய தேதியில் இவையும் புழக்கத்தில் இணைந்து விட்டதாகச் செய்தி. இதிலும் தரம் உண்டு. கஞ்சா அடிப்பவன் மது போதைக்கு அடிமையானவனை விடக் கேவலமானவன்.மது குடிக்கும் போதைக் கைகள் கூட, கஞ்சா அடிப்பவர்களைக் கண்டால் , அவன் கஞ்சாக்குடிக்கிப் பய என்று வசைபாடுவார்கள். காரணம் மது போதையை விட வீரிமயான […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

துவண்டு விடாதே !

எத்தனை தூரமாயினும் மழைத்துளி மண்ணை அடையும். எத்தனை பள்ளம் மேடைக்கடந்தாலும் நதி ஆழியை அடையும். எத்தனை இன்னல் வந்தாலும் மனம் இறுதியில் மகிழ்ச்சி அடையும். வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் என்பது இரவு பகல் போலத்தானே? இரவின்றி பகலுக்கு ஏது மரியாதை? எப்படியும் விடியும். நமக்கும் தான். உதிக்க வேண்டியது சூரியனல்ல. பூமி தான் சூரியனைச்சுற்றி அடைய வேண்டும். சோகங்கள் வெறும்  கருமேகங்கள் போல. குளிர்ந்து மகிழ்ச்சியை மழையாகப்பொழியும். காற்று எனும் முயற்சி இருக்கும் வரை. துண்டுவிடாதே மனிதா! […]

Categories
கருத்து

மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பல்ல.

பெரியோர்களே தாய்மார்களே! கண்டிப்பா இதப் படிங்க. புள்ளைங்கள நிறைய மார்க் வாங்க சொல்லி வற்புறுத்தாதீங்க. நிறைய மார்க் வாங்கினா தான் நல்லா வாழலாம், இல்லாட்டி வாழவே முடியாதுனு சொல்லி பயமுறுத்தாதீங்க. வரப்போகும் தேர்வு முடிவன்று உங்கள் பிள்ளைகள் எதிர்பார்த்த அளவில் மதிப்பெண்கள் வாங்காவிட்டால் கூட தயவு செய்து சபிக்கவோ, வருத்தம் கொள்ளவோ வேண்டாம். தேர்ச்சி பெற்றாலே போதும். பிழைத்துக் கொள்ளலாம். சொல்லப்போனால் நல்ல மார்க் வாங்கிய பிள்ளைகள் பலர் இன்று சமுதாயத்தில் ஒரு பயத்துடனே வாழ்க்கையை நடத்த […]

Categories
கருத்து

அப்பாக்களுக்காக-1

குழந்தைப் பருவத்தில் நாயகனாக, வழிகாட்டியாகத் தெரியும் அதே தந்தை விடலைப் பருவத்தில் வில்லனாகத் தெரிவது வழக்கம். அதைச் செய்யாதே, இதைச்செய்யாதே mobile ரொம்ப உபயோகிக்காதே, சிகரெட் பிடிக்கும் பழக்கம் வந்துவிட்டதோ? தண்ணி அடிக்கிற மாதிரிதெரியுதே? என்ன செலவு பண்ற? நல்ல ஆட்களோட மட்டும் பழகு. நல்ல பழக்கங்களைப் பழகு என்று சொல்லும் போதும், கேட்கும் போதும், வெறுப்பாகத் தான் தோன்றுகிறது. சும்மா எப்ப பாரு advice. என்ற வாசகத்தை உபயோகிக்காதவர்கள் வெகு குறைவு. ஆனால் அவர் பேசுவது […]

Categories
கருத்து விளையாட்டு

ஓடி விளையாடி மகிழட்டுமே!

பளிச்சிடும் கோடை காலம்.கிட்டத்தட்ட பள்ளிகளில் தேர்வு துவங்கி விட்டது.. விடுமுறையை நோக்கிய ஆர்வத்தில் மாணவர்கள்.. அய்யய்யோ லீவுல என்னன்ன அழிச்சாட்டியம் பண்ணக் காத்துருக்காய்ங்களோன்னு பீதியில் பெற்றோர்கள்.. அடிக்கிற வெயிலில் வெளிய போயி விளையாடாம இருக்க videogames, dvd player, play station, Android mobile games ன்னு பயங்கரமா யோசிச்சு காசு சேத்துட்டு இருக்கீங்களா? இல்ல வாங்கிட்டீங்களா? அப்படி எதாவது வாங்கியிருந்தா அத திருப்பி அனுப்புங்க மொதல்ல… அந்த காசுல நல்ல பருத்தி ஆடை 4 set…வாங்கிடுங்க […]

Categories
கருத்து

சமுதாயம் நம் கையில்

சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கும் மனநிலை எப்போது வரும் என்பது புரியவில்லை. ஒரு சைக்கோ கில்லர் திரைப்படத்தை பார்த்து சைக்கோவாக மாறாத இளைஞர்கள், ஒரு நேர்மையான காவல் அதிகாரி படம் பார்த்து காவல் அதிகாரியாக மாறாத இளைஞர்கள், கதாநாயகன் புகை பிடிப்பதை மட்டும் உடனடியாகப் பின் தொடர்கிறார்கள்? என்ன காரணம்? எளிதாக கிடைக்கிறது. இதில் குற்றம் சினிமாக்காரன் மீது மட்டுமா? பள்ளி சீருடையுடன் பாருக்குள் கூத்தடிக்கும் மாணவர்கள், பாருக்குள் செல்ல வழி கொடுத்தது சினிமா மட்டும் தானா? […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

எல்லை தாண்டி, எமனாகி நிற்கும் நுகர்வு.

நுகர்வு… நம் தேவைக்கு ஏற்றதை வாங்குவது நுகர்வு எனப்படுவது மாறி, வியாபாரிகளின் தந்திரத்தால் நம்மிடையே திணிக்கப்படுகிறது, தற்கால நுகர்வு. இன்று காலை நடந்த ஒரு சிறிய வியாபாரம். அண்ணன் வடை குடுங்கனே என்றேன் எத்தனை என்று கேட்டார் அண்ணன். ஒரு வடை போதும்னே என்றேன். தம்பி 3 பத்து ரூபா என்றார். இல்லணே, நான் ஒருத்தன்தான். ஒரு வடை போதும். ஏற்கனவே சிம்ரன் மாதிரி மெல்லிசா இருக்கேன். இதுல 3 வடை சாப்பிட்டா வெளங்கிடும் என்று விளக்கம் […]

Categories
கருத்து நினைவுகள்

பகிர்தலின் மகிழ்ச்சி

வாழ்க்கை என்பது எங்கோ தூரத்தில் இல்லை. திரும்பிப் பார்த்தால் நாம் இழந்த போன வார இறுதியிலும் அடுத்த வார இறுதியிலும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. நண்பர்களுடன் சிறிது நேர உரையாடல். பழைய விஷயங்கள். டேய் நம்ம 4 வது பிடிக்கிறப்ப இருந்தாலே மைதிலி. இப்ப அவ புள்ள 4 வது படிக்குது டா. நம்ம பாரு இன்னும் உட்கார்ந்து அவள யோசிச்சுட்டு இருக்கோம் என்பதில் ஆரம்பித்து, மாப்ள headmaster நம்மள அடிப் பிரிச்சாரு ஞாபகம் இருக்கா? […]