Categories
கருத்து

சமுதாயம் நம் கையில்

சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கும் மனநிலை எப்போது வரும் என்பது புரியவில்லை. ஒரு சைக்கோ கில்லர் திரைப்படத்தை பார்த்து சைக்கோவாக மாறாத இளைஞர்கள், ஒரு நேர்மையான காவல் அதிகாரி படம் பார்த்து காவல் அதிகாரியாக மாறாத இளைஞர்கள், கதாநாயகன் புகை பிடிப்பதை மட்டும் உடனடியாகப் பின் தொடர்கிறார்கள்? என்ன காரணம்? எளிதாக கிடைக்கிறது. இதில் குற்றம் சினிமாக்காரன் மீது மட்டுமா? பள்ளி சீருடையுடன் பாருக்குள் கூத்தடிக்கும் மாணவர்கள், பாருக்குள் செல்ல வழி கொடுத்தது சினிமா மட்டும் தானா? […]

Categories
தற்கால நிகழ்வுகள்

தலைதூக்குமா தவெக?

தமிழக வெற்றிக் கழகம். கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் மாறி மாறி அமர்ந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பெரிய சக்தி உருவெடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி ஈழப்போரின் முடிவில் பெரிதாகக் உருவெடுக்கத் துவங்கியது. ஆனால்அந்தகக்கட்சி அதன்பிறகு பல குழப்பங்களைச் செய்து, கொள்கை ரீதியாகக் குழப்பமில்லாமல் மக்களைச் சென்றடைந்து அவர்களின் மனதை வெல்வதில் சோடையாகத்தான் உள்ளனர். திராவிடக் கொள்கைகள் தமிழகத்தில் கோலோச்சி மக்களின் மனதையும் வென்று விட்டதால், மாற்றுக் கொள்கைகள் கொண்ட பாஜக, காங்கிரஸ் […]

Categories
விளையாட்டு

ஈசாலா கப் நம்தா?

தொடங்கிவிட்டது இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் திருவிழா. இனி நாள்தோறும் ஒரு மாதத்திற்கு மாலை வேளை, வீடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசை மாற்றுதல் தொடர்பான சண்டைகள் நிகழும். முன்புபோல இல்லை, இப்போதெல்லாம் ஆளாளுக்கு ஒரு மொபைல்போன் வைத்துக்கொண்டு அதிலேயே அவரவர் விருப்பத்திற்கு பார்த்துக் கொள்கிறார்கள். ஐபிஎல் ன் அனைவரின் செல்லப் பிள்ளைகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் வெற்றியைப் பதித்துப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. கண்ணன் தேவன் டீ குடி, சி எஸ் கே புடி புடி […]

Categories
நினைவுகள்

ஒலி வழி இன்பம்- ரேடியோ 📻 நினைவுகள்

பாடல்கள். பெரும்பாலான மனிதர்களின் ஆறுதல், இன்பம், துக்க மருந்து, சோகம் தீர்க்கும் நிவாரணி என சர்வரோகிணியாக இருப்பது/ இருந்தது பாடல்கள். இன்றும் பலரும் பாடல்களை மருந்து போல, கிரியா ஊட்டியாக, சோக நிவாரணியாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். வளரும், வருங்கால சந்ததி தான், அதிலிருந்து சற்று விலகிப் போவதாகத் தெரிகிறது. அதாவது பாடல்களை ஒலி வடிவில் கேட்பது ஒரு சுகம். அது ஒரு ரகம். ஆனால் இப்போது ஒரு பாடல் வெளியாகும் போதே அது யூடியூப் பார்வைகளைக் […]

Categories
கருத்து தகவல்

குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்

குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]

Categories
அறிவியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

விளக்கேற்றி கைதட்ட வேளை வந்துவிட்டதா?

நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது. மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம். ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

நீதி நிலைநாட்டப்பட்டது

தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்ற வாசகங்களைப் பல இடங்களில் கடந்து வந்திருக்கிறோம். ஒரு ஆத்திரத்தில் தன்னிலையறியாமல் செய்த குற்றங்களுக்கு வேண்டுமானால் பரிசீலித்து குற்றவாளி மனம் திருந்தும்படியாக தக்க தண்டனை கொடுக்கப்படலாம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் படுகொலைகளை அலசி ஆராய்ந்து கருணை காட்டுவது என்பது நியாயமாகாது. கண்டிப்பான முறையில் எதிர்காலத்தில் இன்னொருவர் அது மாதிரியான தவறை தவறிக் கூடச் செய்யத்துணிந்து விடக் கூடாது. அந்தளவிற்கு கடுமையான தண்டனை அதாவது, உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கி, நீதியை […]

Categories
சினிமா நினைவுகள் மறைவு

ஒப்பற்ற அன்பாளன் மறைந்து ஓராண்டு கழிந்தது.

ஒரு மனிதனின் பிரிவுக்காக, அவன் தாய் அழுதால் அவன் நல்ல மகன், அவனது பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன், அவனது மனைவி அழுதால் அவன் நல்ல கணவன், ஆனால் நாடே அழுதால் அவன் நல்ல தலைவன் என்ற வசனம் இவருக்கு சினிமாவில் மட்டும் பொருந்தவில்லை. சென்ற ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்தது. மெரினாவில் இருந்த கடற்கரை கோயம்பேட்டிற்கு இடம் மாறியதாக கண்ணீர் ததும்ப மக்கள் அலை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

வெள்ளைக் காகிதத்தில் கருப்பு மை.

இதை எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை. வன்மையாகக் கண்டிப்பதா? கோபம் கொள்வதா? வருத்தப்படுவதா? இல்லை பரிதாபப்படுவதா? இது எல்லாமே இந்த விஷயத்தில் அடக்கம். தமிழ்நாட்டின் முதன்மைப் பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே ஒரு இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல். அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இது முதல் சம்பவம் அல்ல என்பது. ஒரு பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தில், அதுவும் நகரின் மிக முக்கியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தினுள், ஒருவன் இந்த மாதிரியான பாலியல் […]

Categories
கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

என்று தணியுமோ இந்த மாய மோகம்.

என்று தணியுமோ? இதற்கு முன்பு இந்த வார்த்தைகள் என்று தணியுமோ இந்த சுதந்திர தாகம் என்று ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்காக உபயோகிக்கப்பட்டது. கிட்டதட்ட அதே அளவு தாக்கமுடைய இன்னொரு விஷயத்திறகுத் தான் இந்த வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். அப்படி நான் இப்போது இந்த வார்த்தைகளை உபயோகிக்கப் போவது இதற்காகத்தான். என்று தணியுமோ இந்த சினிமா பிரபலங்கள் மீதான மோகம்? ஆம். இன்று பள்ளிக் குழந்தைகள் முதல் பல் போன கிழவன் கிழவி வரை பெரும்பாலானோர் சினிமா மீதும் […]