Categories
தற்கால நிகழ்வுகள்

சபாஷ் சரியான முடிவு! – தெலுங்கானாவின் புதிய இட ஒதுக்கீடு முயற்சி

சமூக நீதியை நிலைநாட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆமாம். ஒரு குறிப்பிட்ட சாதிய பின்புலத்தில் பிறந்து, அந்த சாதிக்கான ஒதுக்கீடுகளைப் பெற்று பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கைத் தரத்திலும் ஓரளவுக்கு உயர்ந்து விட்ட பல குடும்பங்களை, குழுக்களை க்ரீமி லேயர், அதாவது பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவென கண்டெடுத்து அவர்கள் மீண்டும் அந்த சலுகைகளை உபயோகிக்க முடியாமல் தடுக்கும் ஒரு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இந்தத் திட்டம் தாழ்த்தப்பட்ட  சமூகத்தை சார்ந்தவரை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரின் அகங்காரம்

நமது பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம், அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் அவசியம் என்று. அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக அரசுப் பணி செய்யும் அனைவருக்கும் அந்தக் கடிவாளம் அவசியம். சில வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த மோசமான பேருந்து பயணத்தைப் பற்றியும், அது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் அளித்த புகார் பற்றியும் எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து சரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. “தெரியாம செஞ்சுட்டாங்க சார், நான் கண்டிச்சிருதேன்” என்று எளிதாக […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் கட்டாயம்!

சமீபத்திய மாநில நிதிநிலை அறிக்கையில் அரசு அதிகாரிகளுக்கு அவர்களே வியக்கத்தக்க வகையில் பல சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டிருந்தது. அரசு வேலையில் இருப்பவர்கள் உயிர் துறக்கும் பட்சத்தில் மகளுக்கு திருமண செலவுக்கு 5 லட்சம், 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு என பிரம்மாண்ட சலுகைகள் வழங்கப்பட்டன. தனியார் ஊழியர்கள் பலரும் நிரந்தரமான வேலைச்சூழல் மற்றும் நியாயமான சம்பளம் என்பனவற்றிற்கே திண்டாடும் போது அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இத்தகைய சலுகை கொடுப்பதை இங்கே யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இதனால் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவையற்ற நுகர்வு தெருவில் தான் சேரும்.

குழம்ப வேண்டாம். நிறுத்துமிடமில்லாமல் இல்லாமல் கார் வாங்கக் கூடாது என்ற அரசாங்க நடவடிக்கை பற்றிய சிந்தனை. சமீபத்திய பகட்டுக் கட்டுரையில் நாம் பேசிய பல விஷயங்களைப் போல இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கார் வாங்குறீங்களே?அத நிறுத்த இடமிருக்கா? இந்தக் கேள்வியை அது வரை யாருமே கேட்டதில்லை. இது வரை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவ்வளவு தான்.உங்களுக்கு சிலர் எவளோ, பான் கார்டு , ஆதார் கார்டு கொடுங்க, 0 டவுன் பேமண்ட்ல அடுத்த மாசம் கார் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

குதூகலச் சென்னை- பீச் கிரிக்கெட் ஒளிபரப்பு அனுபவம்

சென்னை, என்று சொன்னாலே நம் மக்களிடமிருந்து இரண்டு விதமான எதிர்வினைகள் வரும். என்னப்பா எதுக்கெடுத்தாலும் சென்னை சென்னைனு. மத்த ஊர்ல இருக்கவம்லாம் மனுஷன் இல்லையானு, சென்னைக்கு சம்பந்தமில்லாத சென்னையின் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ளும் சிலர் பேசுவதுண்டு. இவர்களாவது பரவாயில்லை. இன்னும் ஒரு சிலர் உண்டு, இங்கேயே வந்து வாழ்ந்து அனுபவித்து சம்பாதித்து விட்டு, இந்த ஊரையே, ஊரா இது? என்று கூறும் நன்றி கெட்ட ரகம். நம்ம சென்னை இதுக்கெல்லாம் கவலைப்படாமல் எத்தனை பேர் வந்தாலும் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இதற்குத்தானா இந்தப்பாடு?- கிளாம்பாக்கம்   பேருந்து முனையப் பிரச்சினைகள்

எந்தவொரு விஷயத்தையும் உருவாக்குவதைக் காட்டிலும் அதன் பராமரிப்பில் தான் அதனுடைய முழுப்பலனும் கிடைக்கும். சரியாக கவனிக்கப்படாமல், பராமரிக்கப்படாமல் விடப்பட்ட எதுவுமே அதன் பலனைத்தராது. மேலும் அவப்பெயரையும், மனவருத்தத்தையும் உண்டாக்கி விடும். அதை உருவாக்குவதற்கான உழைப்பு விரயமாகிப்போகும். அப்படிப் பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் தாண்டி உருவானது தான் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். ஆனால் அதன் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாகவும், நகரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு காரணமாகவும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளானது மறுக்க முடியாத ஒன்று. ஆரம்ப […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இப்படியும் ஒரு இழப்பா?

ஒரு அரசின் அடிப்படைக்கடமை என்பது குடிமக்களுக்கான தரமான வாழ்க்கையை கொடுப்பது மட்டுமல்லாது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது. மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றைப் போதுமான கல்வியும், வேலைவாயப்பும் வழங்குவதை வைத்து அவரவர் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால் மருத்துவ செலவு என்பது சாதாரண மக்கள் அனைவராலும் ஈடுசெய்ய இயலாத ஒன்று. இங்கு அன்றாட நோய்கள் ஏழை பணக்காரனைப் பார்த்து வருவதில்லை. பாமரனுக்கும் லட்சங்களில் செலவு வைக்கும் நோய்களும் இன்றைய நாட்களில் வருவது இயல்பாகி […]

Categories
கருத்து தகவல்

குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்

குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

எப்போது ஒழியும் இந்தக் கட்டணக் கொள்ளை

பண்டிகைகள் வந்தாலும் போதும் இந்த ஆம்னிப் பேருந்துகளுக்குக் கொண்டாட்டம் தான். பொங்கலையே நம்பியிருக்கும் கரும்பு விவசாயிகள் வாழ்க்கை விடிவதாயில்லை. மஞ்சள் விளைவிப்பனிடம் பேரம், காய்கறி விலை ஏறினால் காட்டம் காட்டும் பொதுமக்கள், இந்த ஆம்னிப் பேருந்தின் கட்டணக் கொள்ளைக்கு விடிவு காலம் வராதா என்று ஏங்கினால் மட்டும் போதாது. எப்படி தக்காளி விலை கட்டுபிடி ஆகாத காலத்தில் தக்காளியைத் தவிர்க்கிறோமோ, அதே போல முருங்கைக்காய் விலை உயரும் போது, முருங்கைக்காய் இல்லாம சாம்பார் ருசிக்காதா என்று பழகிக் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

ஒரு குடிமகனின் கருணை மனு.

இப்படியும் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்விலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனை கட்டுரை. ஒரு கிராம மக்கள் எழுதும் மனு. ஐயா, வணக்கம். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்லத்தான் விருப்பம். ஆனால் எங்கள் கிராமத்திற்கே ஒளி தந்த மின்சார ட்ரான்ஸ்பார்மரை திருடிய அந்த இந்தியனைக் காவல்துறையோ, அரசோ கண்டுபிடித்திருந்தால் பெருமையோடு சொல்லியிருப்பேன், “நான் இந்தியன்” என்று. சரி போனால் போகட்டும், ட்ரான்ஸ்பார்மரைத் திருடியவனைப் பிறகு பார்க்கலாம். ஆனால் அந்த ட்ரான்ஸ்பார்மர் மூலமாக மின்சாரம் பெற்ற கிராமத்தைப் பார்க்கலாம் […]