Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

மக்களின் வரிப்பணம் விரயம்.

இடைத்தேர்தல் மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது இந்த இடைத்தேர்தல்.சமீபத்தில் கூட திரு.ராகுல் காந்தி அவர்கள் தனது வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் அங்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நிகழ்ந்தது. இது ராகுல் காந்தி அவர்களின் கதை மட்டுமல்ல. எல்லா கட்சிகளின் தலைவர்களும் இதை செய்வது வழக்கம் தான். இந்த இடைத்தேர்தலானது ஒரு உறுப்பினர் உயிரிழந்து, அந்த இடத்தில் வெற்றிடம் ஏற்பட்டாலோ, அல்லது குற்ற வழக்கில் சிறை […]

Categories
சினிமா தமிழ்

திரை விமர்சனம்: அமரன் – சொல்லி அடித்த கில்லி

தீபாவளி மெதுவாக குளித்து முடித்து பலகாரங்கள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்தாலும், படம் பார்த்து முடித்தால் தானே திருப்தி. தீபாவளிக்கு மறக்க முடியாத பல பெரிய படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்திருக்கிறது. அப்படி இந்த வருடம் சொல்லி அடிக்க வந்த படம் அமரன். வெகுவான சினிமா ரசிகர்கள் மற்றும் குடும்பங்களின் தேர்வு இந்தப் படம் தான். காரணம் இது நம்மிடையே வாழ்ந்து மறைந்த முன்னாள் இராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு என்பதாலும், சிவகார்த்திகேயன் பல குடும்ப ரசிகர்களைத் தக்க […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

தவெக மாநில மாநாடு பற்றிய சிறு தொகுப்பு.

தவெக – தமிழக வெற்றிக் கழகம். மிகப் பிரம்மாண்டமான மாநாடு நல்ல விதமாக நிகழ்ந்தது. ஆங்காங்கே சிறு பெரு விபத்துகள் நிகழ்ந்ததை அறிந்தோம். வருத்தங்கள். மற்றபடி எந்தவித குறைபாடுகளும் பெரிதாகத் தோன்றவில்லை. சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாநாட்டுக் கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகத் தகவல். இதெல்லாம் போகப் போக சரி செய்து கொள்ள வேண்டும். சரி. மாநாடு எப்படி இருந்தது என்பதை அலசலாம். கொடி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட தவெக வின் கொடி 100 அடி கம்பத்தில் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருவிழாக்களும், பண்டிகைகளும் – தகர்கப்படும் நற்குணங்கள்

திருவிழாக்கள் மிகவும் அழகாகத் தான் இருந்தது,காவல்துறை நண்பர்கள் வேடிக்கை மட்டும் பார்த்த காலம் வரை! ஜாதி என்றார்கள், கலவரம் என்றார்கள்,காவல்துறை உண்மையிலேயே காவல் காக்கும் நிலை வந்தது! அம்பலக்காரர்கள் மட்டும் சூழ்ந்து காக்க வேண்டிய கடவுள் காவல்துறையால் வளைத்துக் காக்கப்பட்டார்! இரவு 1 மணிக்கு, ஏம்ப்பா மணி ஒண்ணுதானயா இன்னொரு பாட்டு போடுயா என்ற வாசகம் ஒலித்தது சிறிது காலத்திற்கு முன்! இப்போதோ “இந்தாங்கப்பா உங்கள பத்து மணியோட நிகழ்ச்சிய முடிக்கச் சொன்னோம்ல?மணி 10.30 ஆகுது, இன்னும் […]

Categories
தமிழ் வரலாறு

தியாகி அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள். தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார் போன்ற தலைவர்களோடு கம்பீரமாக நிற்கும் அஞ்சலையம்மாள். இது யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சில காலத்திற்கு முன்பே பள்ளிப் புத்தகங்களில் இவரைப்பற்றிய குறிப்புகள் பாடமாக இணைக்கப்பட்டது. இன்று நான் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது இந்தக் கேள்வி எழாமல் இல்லை. யார் இந்த அஞ்சலையம்மாள் என்று. இவர் யாரென்று பார்க்கலாமா? முதலில் இவர் பெற்ற பெரும்புகழை ஆராயலாம். சில காலத்திற்கு முன்பு […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

த.வெ.க மாநாடு: தமிழுக்கு வந்த சோதனை

மாபெறும் மாநில மாநாடு 😂 மா- பெறும் மாநில மாநாடு. இந்த பிரச்சினை குறித்த காணொளி ஏற்கனவே இணையத்தில் பரவலாக பேசப்படும் நிலையில், நாம் நமது பயணத்தில் ஒரு பகுதியாக இதை மேற்குறிப்பிட்டு பேச வேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே விஜய் அவர்கள் இந்த தவெக வை நடத்த வாயில் வயரைக்கடித்து வண்டி ஓட்டுவது போல ஓட்ட வேண்டும் என்று ஒரு உருவகக் கதை எழுதியிருந்தோம். அதை சற்றும் ஏமாற்றாத வகையில் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகப்பெரிய பேனர் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து- தகராறு வாழ்த்தா?

தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை மாப்பிள்ளையோட சீப்பை ஒழித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்பது போல, சில விஷயங்களில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் கேலிக்கூத்துகள் ஏற்புடையதாக இல்லை. திருவள்ளுவருக்குக் காவி அணிவித்தாலும், அவர் இந்து என்று சொன்னாலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அவர் கூறிய கருத்து மாறாது. அதுபோல, கனியன் பூங்குன்றனார் வழிவாழும் தமிழ்ச் சமூகத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்து மாறாது. வெளித்தோற்றத்தின் மாற்றம், ஒட்டுமொத்த கருத்தையும் மாற்றி […]

Categories
குட்டி கதை தமிழ் தற்கால நிகழ்வுகள்

உருவகக் கதை: தவெக தலைவருக்கு வந்த சோதனை

இன்றைய நாட்களில் மீம்கள் என்ற வகையிலான கேலி உருவகங்கள் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் பிரபலமான காட்சியை வேறொரு நிகழ்வுக்கு உருவகப்படுத்தி கேலி செய்வது நடைமுறை. முன்பும் இது போன்ற கேலி செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் அது கேலிச் சித்திரங்களாகவோ அல்லது எழுத்து வடிவிலோ இருந்தது. உதாரணமாக பாரதியார் நடத்திய இதழில் கேலிச்சித்திரங்கள் பிரபலம். சமீபத்திய இந்து பத்திரிக்கை வரை நாம் அதைக் கண்டிருக்கலாம். அதேபோல, துக்ளக் என்ற வார இதழில் சோ அவர்கள் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

இதுதானாப்பா ஜனநாயகம்? இதுவா கட்சிக் கொள்கை?

உனக்கென்னப்பா நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்ற சொல்லாடலை நாம் அடிக்கடி எங்கேயாவது கடந்து வந்திருப்போம். அதாவது கஷ்டப்படாமல் வாழ்வில் சிறப்பாக வாழ்ந்து, வெவ்வேறு உயரங்களை, ஒரு பாமரன் கனவில் கூட நினைக்க முடியாத உயரங்களை எளிதாக அடையும் பெரிய பதவியிலிருக்கும் அல்லது பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகளை பார்த்து பலரும் சொல்லும் வசனம் தான் “உனக்கென்னப்பா, நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி” இன்றைய சூழலில் அப்படி ஒரு ராஜா வீட்டு கன்னுக்குட்டி தான் நமது மாநிலத்தின் […]