Categories
தற்கால நிகழ்வுகள்

சபாஷ் சரியான முடிவு! – தெலுங்கானாவின் புதிய இட ஒதுக்கீடு முயற்சி

சமூக நீதியை நிலைநாட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆமாம். ஒரு குறிப்பிட்ட சாதிய பின்புலத்தில் பிறந்து, அந்த சாதிக்கான ஒதுக்கீடுகளைப் பெற்று பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கைத் தரத்திலும் ஓரளவுக்கு உயர்ந்து விட்ட பல குடும்பங்களை, குழுக்களை க்ரீமி லேயர், அதாவது பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவென கண்டெடுத்து அவர்கள் மீண்டும் அந்த சலுகைகளை உபயோகிக்க முடியாமல் தடுக்கும் ஒரு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இந்தத் திட்டம் தாழ்த்தப்பட்ட  சமூகத்தை சார்ந்தவரை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?

இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. என்ற திருக்குறளை அன்றாடம் சாமானியனும் மனதில் வைத்துக்கொண்டால் சொல்லாடல் எப்போதுமே சுகம் தான். சாமானியனுக்கே சொல்லாடல் அதாவது பேசும் மொழி என்பது முக்கியமானதாகி விட்டது.நாம் பேசும் வார்த்தைகளின் இனிமை தான் நம் எதிரில் இருப்பவரிடம் நமக்கான அடையாளத்தைக் காண்பிக்கும் ஒளித்திரை. அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தின் முக்கிய பிரிவில் மந்திரி பதவி வகிக்கும் அல்லது அந்தப் பதவிக்கான தகுதியுடைய ஒரு மூத்த கட்சி உறுப்பினர் எப்படிப் பேச […]

Categories
தற்கால நிகழ்வுகள்

தேவையா சாமி இது?

`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். `எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ இது நமது அதிமுக வின் முன்னாள் ஒப்பற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சினிமாவில் வந்த பாடல் வரிகள்.இந்தப் பாடல் வரிகளை இப்போது அவரது பெயரைச் சொல்லி கட்சி நடத்திப் பதவியில் அமர ஆசைப்படும் அவரது விசுவாசிகளுக்குப் பாடிக் காட்ட […]

Categories
தற்கால நிகழ்வுகள்

தலைதூக்குமா தவெக?

தமிழக வெற்றிக் கழகம். கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் மாறி மாறி அமர்ந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பெரிய சக்தி உருவெடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி ஈழப்போரின் முடிவில் பெரிதாகக் உருவெடுக்கத் துவங்கியது. ஆனால்அந்தகக்கட்சி அதன்பிறகு பல குழப்பங்களைச் செய்து, கொள்கை ரீதியாகக் குழப்பமில்லாமல் மக்களைச் சென்றடைந்து அவர்களின் மனதை வெல்வதில் சோடையாகத்தான் உள்ளனர். திராவிடக் கொள்கைகள் தமிழகத்தில் கோலோச்சி மக்களின் மனதையும் வென்று விட்டதால், மாற்றுக் கொள்கைகள் கொண்ட பாஜக, காங்கிரஸ் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

நல்லதைப் பாராட்டு – காட்பரீ விளம்பரம் உணர்த்தும் உண்மை

அறிவை, அன்பைப் பகிர மொழி அவசியமில்லை.ஒரு செயலோ, சைகையோ அல்லது ஒரு புன்னகையோ கூடப் போதும்தான். ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடம் நாமென்ன பேசிப் பழகியா அன்பைப் பகிர்கிறோம்? ஐந்தறிவென்ன நம்மில் பலர் உயிர் இல்லாத வாகனங்கள் உட்பட சில பொருட்களின் மீதும் கூட பேரன்பு கொண்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் மொழி அவசியமில்லை. உலகில் மொழி வரும் முன்பே, அன்பும் அறிவும் பகிரப்பட்டு தான் இருந்திருக்கிறது. கும்மிடிப்பூண்டி தாண்டினால் சோறு கிடைக்காது, ஏக் சாய் தேதோ என ஹிந்தி பேசத் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

மும்மொழித் தகராறு- மத்திய மாநில அரசுகளின் தவறு.

இன்று அல்ல, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இதுதான் அரசியல் பரபரப்பு. இந்தி மொழியைத் திணிக்காதே! ‘இந்தி மொழியைத் திணிக்காதே’ என்று துவங்கி, ‘இந்தி தெரியாது போடா’ வரை வந்துவிட்டோம்.இப்போது மீண்டும் மத்திய அரசிடமிருந்து இதே மாதிரியான ஒரு போக்கு. இதில் ஆராய வேண்டும் என்றால், கல்வி என்பது மத்திய பட்டியலிலோ, மாநிலப் பட்டியலிலோ இல்லை. அது பொதுப்பட்டியல். அதன் அடிப்படையில் ஒரு தனி மாநிலத்திற்கு அதன் கல்வித்திட்டத்தைக் கட்டமைத்துக் கொள்ள நமது சட்டம் உரிமை அளித்திருக்கிறது. அப்படியிருக்கும் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ?

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் , ஆனால் கோவில்பட்டியில் குடிநீருக்கே திண்டாட்டம் என்று முன்னாளில் ஒரு கேலி சொலவடை எங்கள் ஊரில் உண்டு. அதாவது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்த போது இந்த சொல்வடை சொல்லப்படுவது உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை. சும்மா ஒரு கோர்வையான வார்த்தைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது கோர்வைக்காக அல்லாமல் உண்மையாகவே சொல்லப்படலாமோ என்று தோன்றுகிறது. ஆம், இந்து முன்னனி, இந்து ஆதரவு, இந்து முன்னேற்றம், […]

Categories
கருத்து தகவல்

குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்

குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

ஒரு குடிமகனின் கருணை மனு.

இப்படியும் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்விலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனை கட்டுரை. ஒரு கிராம மக்கள் எழுதும் மனு. ஐயா, வணக்கம். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்லத்தான் விருப்பம். ஆனால் எங்கள் கிராமத்திற்கே ஒளி தந்த மின்சார ட்ரான்ஸ்பார்மரை திருடிய அந்த இந்தியனைக் காவல்துறையோ, அரசோ கண்டுபிடித்திருந்தால் பெருமையோடு சொல்லியிருப்பேன், “நான் இந்தியன்” என்று. சரி போனால் போகட்டும், ட்ரான்ஸ்பார்மரைத் திருடியவனைப் பிறகு பார்க்கலாம். ஆனால் அந்த ட்ரான்ஸ்பார்மர் மூலமாக மின்சாரம் பெற்ற கிராமத்தைப் பார்க்கலாம் […]

Categories
அறிவியல் தற்கால நிகழ்வுகள்

வளர்ச்சி எனும் பேரழிவு – போபால் யூனியன் கார்பைடு பின்விளைவுகள்

நிகழ்ந்த அந்த மறக்க முடியாத பேரழிவும், நிகழும் இப்போதைய விளைவுகளும், வளர்ச்சி என்ற பெயரில் தான் முதலில் துவங்கப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாய வளர்ச்சிக்கான திட்டம் என்ற ஏதோ ஒரு பெயரில் தான் இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் எலிகளின் மீது சோதனை ஓட்டம் போல வளரும், வளராத நாடுகளில் மக்கள் தொகையுள்ள நகரங்களில் செயல்படுத்தப்படுகின்றன. நான் இங்கே பேசுவது போபால் விஷவாயு சம்பவத்தை உருவாக்கிய யுனியன் கார்பைடு நிறுவனத்தைப்பற்றி தான். விவசாய வளர்ச்சி […]