ஒரு குறிப்பிட்ட சலவை சோப்பு விளம்பரத்தின் அநியாயம் தாங்க இயலவில்லை.அதைப் பார்க்கும் முன்பு, நமது நினைவிலிருக்கும் பல விளம்பரங்களையும் ஒருமுறை அலசலாம். நமது சின்ன வயதில் வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா என்ற விளம்பரப் பாடலைப் பாடாத ஆட்களே இருந்திருக்க மாட்டோம். சில விளம்பரங்கள் நமது மனதைக் கவர்ந்தவையாகவும் இருந்தன. Boost is the secret of our energy போல.. இன்றைய சூழலில் வியாபார போட்டிகள் அதிகரித்த காரணத்தால் பல விளம்பரங்களும் மக்களின் […]
Category: தமிழ்

சென்ற வாரம் ஒரு பெரிய சிங்கம் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த காரணத்தால் குரங்கு 🐵 பல்டியை கவனிக்கத் தவறிவிட்டோம். ஆம் வேட்டையன் என்ற சூப்பர் ஸ்டார் ஜோரில் ப்ளாக் என்ற வித்தியாசமான குரங்கு பல்டி படத்தைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. வேட்டையனுக்கு எதிரான சில சமூக விரோதிகள் இந்தப்படத்தையும் பாருங்கப்பா, அந்தப் படத்துக்கு இது எவ்வளவோ மேல் என்று விளம்பரப் படுத்துவதால் ஒரு சுமாரான ரசிகர் கூட்டம் திசைமாறி இந்தப் படத்திற்கு வருகிறார்கள். சரி அப்படி திசைமாறி […]
நீ விதைப்பதே விளையும் என்பது மறுக்க இயலாத ஒன்று. நேற்றைய மாணவர்கள் இன்றைய சமுதாயம்.இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம். இப்படி இருக்கும் போது மாணவனாக ஒழுக்கம் கற்றவர்கள், சமுதாயமாகக் கட்டமைக்கப்படும் போது அங்கே லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் ஒழியாமல் தொடர்வது அவலம் தானே? நல்ல ஆசிரியர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட நல்ல மாணவர்கள் எப்படி இந்த முறை கேடுகளை எல்லாம் செய்கிறார்கள்? அதற்கான பதில் தான் இந்த சம்பவம். ஆசிரியர்களின் முறைகேடுகளும், அதிகார துஷ்பிரயோகமும். சமீபத்தில் ஆளுநரிடம் […]

ஜெனெரேட்டிவ் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு பொதுவாக எப்படி வேலை செய்கிறது என்று இதற்கு முன்பாக பார்த்தோம். இது உருவாக என்ன தேவை என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தொடர்ந்து பார்போம். டிரான்ஸ்பார்மர் மாடல்கள் வேலை செய்ய, சிறப்பாக தயாரிக்க பட்ட கிராஃபிக் ப்ராசெஸ்ஸரும் அபரிமிதமான டேட்டாவும் தேவை. நமது கம்ப்யூட்டர்களிலும் மொபைல் போன்களிலும் CPU, GPU என்று இரு வேறு செயலிகள் உள்ளன என்று பலரும் அறிவோம். CPU கள் பொதுவாக அறிவுறுத்தல்களை வரிசையாக செயல் […]

சில கனவுகள் நம்மை உறங்க விடுவதில்லை.சில கனவுகள் தூக்கித்தில் வந்தால் கூட நம் நினைவை விட்டு அகலுவதில்லை. அப்படியான ஒரு கனவு தான், நம் கதையின் நாயகனுக்கும். கதையின் நாயகனுக்கு திருமணமாகி விட்டது.இந்த லாக் டவுன் பீரியடில் வேலை இல்லாத காரணத்தால், இரவு 3 மணி வரை விழித்து ஏதாவது படம் பார்த்து விட்டு, காலை 11 மணி வரை தூங்குகிறான். அவனது கனவில்….. கதையின் நாயகன் ராகேஷ், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை ஓரளவுக்கு […]
மழை எச்சரிக்கை கூத்துகள். சமீபத்தில் மெரினா கடற்கரையில் நடந்த நிகழ்வின் போது முன்னெச்சிரிக்கையாக போதுமான அளவு தண்ணீர் ஏற்பாடு இல்லாத காரணத்தால் உயிரிழந்த மக்களின் கதையை அறிந்து வருந்தினோம். இன்று அதே சென்னை மக்கள் உலகம் அழியும் வண்ணம் முன்னெச்சிரிக்கைக் கூத்துகளை செய்வதைக்கண்டு வியந்து இதை எழுதுகிறோம். ஆம். இன்று தற்காலிகமாக நான் ஒரு காய்கறி அங்காடிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். அங்கே சென்று பார்த்தபோது எனக்குப் பெரிய வியப்பு. முக்கிய ரகங்களில் ஒரு காய்கறியும் மிச்சமில்லை. […]

வைஷ்ணவியும், கதிரவனும், காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணம் செய்தார்கள் என்று ஒற்றை வரியில் இருப்பதால், அவ்வளவு எளிதாக திருமணம் நிகழ்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம். எந்த காலத்திலும் பெண் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து கரை சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவால் தானே? ஊர் கூடி, ஆசிர்வாதம் செய்து, உறவினர்களுக்கு சொல்லி, ஜாதகம் பார்த்து, மந்திரங்கள் ஓதி செய்து வைக்கப்பட்ட திருமணங்களே ஓரிரு ஆண்டுகளில் சந்தி சிரிக்க சபைக்கு வந்து வாதாடி விவாகரத்து பெற்று முடிகிறதே? […]

கதை மற்றும் திரைக்கதை பற்றிய முழு வெளிப்பாடும் இல்லாவிட்டாலும், சில பாராட்டுதலுக்காவும், சில விமர்சனங்களுக்காகவும் ஆங்காங்கே சிலவற்றை வெளிப்படுத்த உள்ளோம். சினிமா பார்க்காதவர்கள் கவனத்துல் கொள்ளவும். முதலில் இந்தப்படத்திற்கு ஏன் எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன என்பதே புரியவில்லை.படம் பார்ப்பதற்கே நான் ஒரு எதிர்மறை நோக்கத்துடன் தான் சென்றேன். ஆனால் ஏமாற்றமோ, மோசமோ இல்லை. சராசரிக்கு மேற்பட்ட வகை படம் என்றே குறிப்பிடலாம். படத்தின் முன்னோட்டத்தில் காட்டப்பட்டது போல, படத்தில் கதாநாயகன் ஒரு அதிரடி காவல் கண்காணிப்பாளர். என்கவுண்டர் […]

அழகிய நாசிக் நகரின் அழகியலை வர்ணித்த முதல் பகுதியின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது பகுதி. ஒரு ஊரில் இத்தகைய சிறப்புகள் மொத்தமும் இருப்பதைக் கண்டு வியந்து போனேன். இது ஒரு பகுதி மலை வாசஸ்தளம். கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரம் கொண்டது.நமது மாநிலத்தின் ஊட்டியில் பாதி உயரம்.ஆதலால் இங்கு ஊட்டியின் தட்பவெப்ப சூழலில் பாதியை அனுபவிக்கலாம். அடுத்தது, இந்த நகரம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது.ஆர்ப்பரித்து ஓடும் நதியின் அழகில் மயங்கித்தான் போகிறோம். ராமாயண காவியத்தோடு மிகுந்த […]

மிகப்பெரிய தொழிலதிபர், பெரிய கார்ப்பரேட் முதலாளி என்பதையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய கொடை வள்ளல் என்ற ஒரு விஷயம் தான் அவர்மீது மொத்த இந்திய மக்களுக்கும் அன்பு ஏற்படுத்தியது. கொரோனா காலங்களிலும் சரி, மற்ற காலங்களிலும் சரி அள்ளிக் கொடுப்பதில் ஒரு போதும் அவர் எவரை விடவும் குறைந்ததில்லை. சரியான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும் வாய்வழியாக சொல்லப்படும் கருத்தின் படி அவர் தனது சம்பாத்தியத்தில் கிட்டதட்ட 60-65 சதவீதம் வரை தானமாக அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் அவ்வளவு கொடுத்திருந்தாலும் […]