Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

தவெக மாநில மாநாடு பற்றிய சிறு தொகுப்பு.

தவெக – தமிழக வெற்றிக் கழகம். மிகப் பிரம்மாண்டமான மாநாடு நல்ல விதமாக நிகழ்ந்தது. ஆங்காங்கே சிறு பெரு விபத்துகள் நிகழ்ந்ததை அறிந்தோம். வருத்தங்கள். மற்றபடி எந்தவித குறைபாடுகளும் பெரிதாகத் தோன்றவில்லை. சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாநாட்டுக் கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகத் தகவல். இதெல்லாம் போகப் போக சரி செய்து கொள்ள வேண்டும். சரி. மாநாடு எப்படி இருந்தது என்பதை அலசலாம். கொடி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட தவெக வின் கொடி 100 அடி கம்பத்தில் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருவிழாக்களும், பண்டிகைகளும் – தகர்கப்படும் நற்குணங்கள்

திருவிழாக்கள் மிகவும் அழகாகத் தான் இருந்தது,காவல்துறை நண்பர்கள் வேடிக்கை மட்டும் பார்த்த காலம் வரை! ஜாதி என்றார்கள், கலவரம் என்றார்கள்,காவல்துறை உண்மையிலேயே காவல் காக்கும் நிலை வந்தது! அம்பலக்காரர்கள் மட்டும் சூழ்ந்து காக்க வேண்டிய கடவுள் காவல்துறையால் வளைத்துக் காக்கப்பட்டார்! இரவு 1 மணிக்கு, ஏம்ப்பா மணி ஒண்ணுதானயா இன்னொரு பாட்டு போடுயா என்ற வாசகம் ஒலித்தது சிறிது காலத்திற்கு முன்! இப்போதோ “இந்தாங்கப்பா உங்கள பத்து மணியோட நிகழ்ச்சிய முடிக்கச் சொன்னோம்ல?மணி 10.30 ஆகுது, இன்னும் […]

Categories
கருத்து தமிழ்

கற்ற வழி நிற்கிறோமா?

கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக என்ற குறளை முதல் வகுப்புக்கும் முன்னரே படித்து விடுவதால் இந்தத் தலைமுறை கற்பவற்றைக் கற்ற பிறகு அதற்குத் தகுந்தாற் போல நிற்பதில்லை போல. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கல்வியை படிக்கும் இந்தத் தலைமுறை அதன்படி நடந்து கொள்கிறதா என்பதை நாம் அன்றாட செய்திகளின் மூலமாக அறிந்து கொள்ளத்தானே செய்கிறோம். மேலும் கல்வி என்பது பொது ஒழுக்கத்தையும், மனித நேயத்தையும், அன்பையும் சக […]

Categories
தமிழ் வரலாறு

தியாகி அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள். தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார் போன்ற தலைவர்களோடு கம்பீரமாக நிற்கும் அஞ்சலையம்மாள். இது யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சில காலத்திற்கு முன்பே பள்ளிப் புத்தகங்களில் இவரைப்பற்றிய குறிப்புகள் பாடமாக இணைக்கப்பட்டது. இன்று நான் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது இந்தக் கேள்வி எழாமல் இல்லை. யார் இந்த அஞ்சலையம்மாள் என்று. இவர் யாரென்று பார்க்கலாமா? முதலில் இவர் பெற்ற பெரும்புகழை ஆராயலாம். சில காலத்திற்கு முன்பு […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

பட்டாசு மட்டும் தான் மாசுபொருளா?

தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமான 2 விஷயங்கள் பட்டாசும், புத்தாடைகளும் தான். அதில் ஒரு முக்கியமான விஷயம் சமீப காலங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது. பட்டாசு தான் அது. பட்டாசு சுற்றுச் சூழல் மாசு.பட்டாசு வெடிக்கும் காரணத்தால் ஒரே நாளில் இவ்வளவு புகை கிளம்பியது.பட்டாசு வெடித்து முடித்த இரண்டு நாட்களுக்கு நகரம் முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது. பசுமைப் பட்டாசு, சீனப்பட்டாசு என்று பல பல விதங்களில் பட்டாசு சம்பந்தமான பேச்சு அதிகரித்துள்ளது. அதாவது பட்டாசு […]

Categories
இலக்கியம் தமிழ்

இராஜ இராஜ சோழன் – புத்தகப் பரிந்துரை

புத்தகப் பரிந்துரை. பயிற்று பதிப்பகம் வெளியிட்டுள்ள, திரு.இரா.மன்னர் மன்னன் எழுதிய இராஜ இராஜ சோழன் புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இந்தப் புத்தகத்தை நாம் படிக்கும் போது, தஞ்சை பெரிய கோவிலின் முழு வடிவமைப்பு ரகசியத்தையும் அறிந்து கொள்ளலாம். நிழல் கீழே விழாதா?கோபுரம் ஒரே கல்லால் ஆனதா? போன்ற பல கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் விடை இருக்கிறது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து பல பூகம்பத்தையும் தாண்டி கம்பீரமாக நிற்க என்ன காரணம் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

த.வெ.க மாநாடு: தமிழுக்கு வந்த சோதனை

மாபெறும் மாநில மாநாடு 😂 மா- பெறும் மாநில மாநாடு. இந்த பிரச்சினை குறித்த காணொளி ஏற்கனவே இணையத்தில் பரவலாக பேசப்படும் நிலையில், நாம் நமது பயணத்தில் ஒரு பகுதியாக இதை மேற்குறிப்பிட்டு பேச வேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே விஜய் அவர்கள் இந்த தவெக வை நடத்த வாயில் வயரைக்கடித்து வண்டி ஓட்டுவது போல ஓட்ட வேண்டும் என்று ஒரு உருவகக் கதை எழுதியிருந்தோம். அதை சற்றும் ஏமாற்றாத வகையில் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகப்பெரிய பேனர் […]

Categories
தமிழ் நினைவுகள்

எங்கள் தெரு கோவில் கொடை நினைவுகள்

பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். 1952 ஆம் ஆண்டே பராசக்தி படத்தில் திரு.சிவாஜி கணேசன் இந்த வசனத்தைப் பேசி நடித்திருப்பார். அப்படியிருக்கும் போது 2024 ல் சொல்லவா வேண்டும். நாம் பிழைக்கச் செல்லும் ஊரில் எத்தனை சொகுசுகளும் வசதிகளும் இருந்தாலும் கூட, பிறந்த ஊர் ஒரு குட்கிராமமாயினும், அந்த பிறந்த ஊரில் இருந்த ஏதோ ஒன்றை பிழைக்கச் சென்ற ஊரில் நாம் தொலைத்தது போன்ற அனுபவம் இல்லாமல் இங்கு யாருமில்லை. அப்படி என்னுடைய மனதிற்கு […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து- தகராறு வாழ்த்தா?

தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை மாப்பிள்ளையோட சீப்பை ஒழித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்பது போல, சில விஷயங்களில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் கேலிக்கூத்துகள் ஏற்புடையதாக இல்லை. திருவள்ளுவருக்குக் காவி அணிவித்தாலும், அவர் இந்து என்று சொன்னாலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அவர் கூறிய கருத்து மாறாது. அதுபோல, கனியன் பூங்குன்றனார் வழிவாழும் தமிழ்ச் சமூகத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்து மாறாது. வெளித்தோற்றத்தின் மாற்றம், ஒட்டுமொத்த கருத்தையும் மாற்றி […]

Categories
கருத்து தமிழ்

நுகர்வோர்வாதம்: விளம்பரங்கள் – விஷமங்கள்?

விளம்பர மோகத்தின் விளைவு நுகர்வுத் தூண்டல். நாம் முந்தைய பகுதியில் நம்மை ரசிக்க வைத்த விளம்பரங்கள் மற்றும் முட்டாள்தனமான விளம்பரங்களைப் பற்றி பார்த்தோம். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை நம் மனதில் பதிந்து நமது மூளைக்கு இடும் கட்டளை. அந்த விளம்பரங்கள் உருவாக்கும் நுகர்வுத் தூண்டல். இது நமக்குத் தேவையா, இது நமது தகுதிக்கு ஏற்றதா? இது நமது அன்றாட பழக்கவழக்கத்திற்கும், பாரம்பரியத்திற்கும் ஒத்துப்போவதா என்பதை எல்லாம் சிந்திக்காமல், குருட்டுத்தனமாக […]