Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்வில் முன்னேறுவது எப்படி- பதில் கிடைக்காது.

இந்தக் கட்டுரை ஒரு மனிதனின் கோபத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரை.கோர்வையாக இல்லாமல் போகலாம்.ஆனால் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். இத்தனை நம்பிக்கையோடு சொல்லக் காரணம் இருக்கிறது. அந்தக் கோபம் என்னுடையது தான். அந்த மனிதன் நான்தான். சமீபத்திய பிரபல பாடல் “யார்டா அந்தப் பையன், நான்தான் அந்தப் பையன்“ என்பதைப் போல, இன்று எனக்காக ஒரு கட்டுரை. என் கோபத்தின் வெளிப்பாடாக. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன் நன்கு படித்து, இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை முடித்து, சரியான […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்க்கை அனுபவம்: அன்பை விதைப்போம்

சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் என்ற திரைப்படத்தை மக்கள் வெகுவாகப் பாராட்டியது நம் அனைவருக்கும் தெரியும். இது ஒரு நல்ல ஒற்றுமை எண்ணம் கொண்ட சமுதாயத்தை நமக்குக் காட்டுகிறது. ஆம். ஒரு நல்ல இராணுவ வீரனைப்பற்றிய படத்தைப் பார்த்து நாம் அனைவரும் பாராட்டுவது ஒரு நல்ல தேசப்பற்று மிக்க சமுதாயத்தைக் காட்டுவது போல, குடும்ப உறவுகள் விட்டுப் போகக்கூடாது என்ற ரீதியில் எடுக்கப்பட்ட அந்தப்படம் இத்தனை வெகுவாகப் பாராட்டப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒற்றுமையை நோக்கும் சமுதாயத்தைக் காட்டுவதாகத் தானே […]

Categories
சினிமா தமிழ்

ப்ளடி பெக்கர்- திரை விமர்சனம் .

தீபாவளி பட வரிசை (அமரன், பிரதர்) விமர்சனம் இன்னும் முடிந்த பாடில்லை. அடுத்த படம் அனைவரின் எதிர்பார்ப்பைக் கிளறி, முதல் நாள் இணைய வாசிகளால் கிழித்துத் தொங்கவிடப்பட்ட ப்ளடி பெக்கர் திரைப்படம். இணைய விமர்சனங்களையும், ரசிகர்களின் விமர்சனங்களையும் கேட்டு, இந்தப்படம் சற்றே ஏமாற்றம் அளிக்கும் படம் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம். வித்தியாசமான படங்களை விரும்பும் ஆட்களுக்கு இது ஏமாற்றம் அளிக்காத ஒரு நல்ல படம் தான். கதைக்களம் புதியது. திரைக்கதை ஒரு வீட்டினுள்ளே குறிப்பிட்ட சில […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

சுங்கச்சாவடிகள்- மர்மச்சாவடிகளா? – கட்டண வசூலின் பின்னணி

பரனுர் சுங்கச்சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த சாவடியின் கட்டண வசூலை பற்றி சில மாதங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தோம். இதே கேள்வியை இன்று MP ஒருவரும் எழுப்பியிருக்கிறார் என்ற செய்தியை தொடர்ந்து இந்த கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறோம். சுங்கச்சாவடிகளை இயக்குவது யார்?பணம் எந்தமுறையில் வசூலிக்கப்படுகிறது?இதை யார் நிர்ணயிக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகளுக்கு இவர்களுக்குப் பணம் வசூலிக்க உரிமம் இருக்கிறது? இது போன்ற கேள்விக்கான பதில்கள் பலருக்கும் தெரிவதில்லை. நமது முந்தைய […]

Categories
சினிமா தமிழ்

திரைவிமர்சனம்: பிரதர் – நேற்று போட்ட மசால் வடை

தீபாவளி போட்டியாக களமிறங்கிய 4 படங்களில் 2 படங்கள் தரமானதாகவும், இரண்டு படங்கள் சுமார் ரகமாகவும் வந்திருக்கின்றன. அப்படியான ஒரு சுமார் ரகப் படம் தான் ஜெயம் ரவி நடிப்பில் வந்துள்ள பிரதர் திரைப்படம். இயக்குனர் திரு.ராஜேஷ் அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இயக்குனர் ராஜேஷ் அவர்களின் படம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே இந்தப்படமும் அமைந்துள்ளது. க்ளைமாக்ஸ்ல் துவங்கி பின்னோக்கிப் பயணித்து இந்நாளில் வந்து நிற்கும் கதை. கதாநாயகன் தப்பானவாகப் பார்க்கப்பட்டு பிறகு அவனை அவனே […]

Categories
சிறுகதை தமிழ்

வரதட்சணை- சிறுகதை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு. பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள். எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது. தாம்பூலம் […]

Categories
சினிமா தமிழ்

திரை விமர்சனம்: அமரன் – சொல்லி அடித்த கில்லி

தீபாவளி மெதுவாக குளித்து முடித்து பலகாரங்கள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்தாலும், படம் பார்த்து முடித்தால் தானே திருப்தி. தீபாவளிக்கு மறக்க முடியாத பல பெரிய படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்திருக்கிறது. அப்படி இந்த வருடம் சொல்லி அடிக்க வந்த படம் அமரன். வெகுவான சினிமா ரசிகர்கள் மற்றும் குடும்பங்களின் தேர்வு இந்தப் படம் தான். காரணம் இது நம்மிடையே வாழ்ந்து மறைந்த முன்னாள் இராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு என்பதாலும், சிவகார்த்திகேயன் பல குடும்ப ரசிகர்களைத் தக்க […]

Categories
கருத்து தமிழ்

பதிப்பாசிரியர் குறிப்பு : நினைவுகளை பற்றி – 03

நினைவுகள் வலைப்பக்கத்தின் நோக்கம், செயல்பாடு, மற்றும் இதற்கு பின்புறமாக இருக்கும் காரண, காரியங்களை தொடர்ந்து ஆராய இந்த ஆசிரியர் பக்கம். Oct-28-2024 அன்புள்ள வாசகர்களுக்கு, நினைவுகள் வலைத்தளம் துவங்கி நான்கு மாத காலத்தில், சின்ன சின்ன மைல்கற்களை கடந்து பயணித்து கொண்டு இருக்கிறது. ஒரு வார இதழ் அல்லது மாத இதழ் நடந்த வேண்டும் என்பது எனக்கொரு நீண்ட கால கனவு. என்னுடைய இளமையில், அதாவது சிறுவனாக நான் வாசித்தது எல்லாம் நியூஸ் பேப்பர்களும், வார இதழ்களும் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பண்டிகை நெரிசலால் கிழிந்து தொங்கும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று என்னுடைய உறவுக்கார மாணவி ஒருத்தரை ஊருக்கு வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன். இது எனக்கு கிளாம்பாக்கத்தில் கிட்டத்தட்ட நான்காவது அனுபவம். பழைய மூன்று அனுபவங்களும் சாதாரண நாட்களில் இருந்த காரணத்தால் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலான அனுபவம் தான். ஆனால் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பு விடுமுறை கூட்டத்துடன் கண்ட அனுபவம் வழக்கமான கோயம்பேடு அனுபவமன்றி வேறல்ல. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த காரணத்தால், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் வரைக்கும் மாலை 7 மணி வரை […]

Categories
தமிழ் நினைவுகள்

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்?

உறவாக வாழ்ந்தவர்கள் உடலாக மட்டுமே நம்மோடு வாழ்ந்தவர்கள் அல்ல. நமது நினைவுகளிலும், உயிரிலும் கலந்த அவர்கள் மண்ணுலகிலிருந்து பூத உடலை விட்டுப் பிரிந்தாலும், நம்மிடையே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர அதிக காலம் தேவைப்படுகிறது. ஆறுதலுக்காக மட்டுமே ஆன்மா என்ற வார்த்தை உருவாக்கப்பட்டிருந்தால் இங்கே பாதி பேர் நடைபிணம் தான். அனுபவத்தில் பிறந்தது தான் ஆன்மா என்ற அந்த சொல். நம்மை விட்டுப் பிரிந்த நமது உறவு உன்னதமான ஆன்மாவாக என்றென்றும் நம்மோடு வாழ்வதை […]