வீட்டிற்கு ஒன்று துவங்கி 4,5 என நீளும் பட்டதாரிகளின் எண்ணிக்கை,ஆரோக்கியமானது என்றாலும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வழிவகுக்கிறது. கல்வி கிடைப்பதற்காக உருவாக்கப்பட்ட வசதிகள், நடவடிக்கைகள் வேலைவாயப்புக்கு சரிவர செய்யப்படவில்லையோ, அல்லது இடைவெளி நிரப்பப்படவில்லையோ என்பதை நாம் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். இந்தக் கட்டுரையில் நேர்காணலுக்கு எப்படித்தயாராக வேண்டும் என்று தற்போது பரவலாக நடக்கும் வேடிக்கைகளைப் பற்றி பார்க்கலாம். முதலில் இந்த நேர்காணல் கூற்றுகள் ஐடி நிறுவனங்களில் துவங்கியது. இன்று மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் வரை வந்து விட்டது. […]
Category: கருத்து
சினிமா மற்றும் ஆன்மிகம் தான் இன்று கோடிகளில் பணம் கொழிக்கும் தொழில்துறை அல்லாத இரு துறைகள் என்பது மறுக்க முடியாத உண்மை. சினிமா ஆவது பல கோடிகளில் செலவு செய்து பல மனிதர்களின் உழைப்பில் உருவாகி திரையில் ஓடி மக்கள் மனதைக்கவர்ந்தால் தான் வெற்றியும் பணமும். ஆன்மீகம் அப்படி இல்லை. பழனிக்குச் சென்றால் பயனுண்டு, திருப்பதி சென்றால் திருப்பமுண்டு, ஐயப்பனைக்கண்டால் ஆனந்தமுண்டு என்று நம்பி அங்கே சென்று அழுது புரண்டு தங்கள் பிரார்த்தனைகளைக் கொட்டும் எத்தனை பக்தர்களுக்கு […]
குருபக்தி, குட்டி கதைகள்
குருபக்தியை நினைவுறுத்தும் விதமாக சிறுகதைகளை பெரியவர்கள் சொல்வதுண்டு. நினைவுகள் வாசகர்களோடு அப்படியான இரு கதைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.
நினைவுகள் என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாத வரம்.
ஏதேதோ நினைவுகளின் வாட்டாத்தால் நினைவுகளைப்பற்றி ஒரு கட்டுரை, நினைவுகள் வலைதளத்தில்.
ஒரு பொருளை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளும் போது இல்லாத ஒரு விஷயம், அதை ஒருவரிடமிருந்து செவி வழியே கேட்கும் போது இருக்கும்.
அது நமது கற்பனைத்திறன்.
இளம் பருவத்தில் பலரும் வரலாற்றை விரும்பி படிப்பது இல்லை. அதுபற்றிய தெளிவான சிந்தனையும் இல்லை. சிறுவர்களாக இருக்கும் போது பல வருடங்ளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களின் தொகுப்பு, நமக்கு ஆர்வத்தை தூண்டாமல், தூங்க வைக்கின்றன. வாழ்க்கை பாடமாக அமைய வேண்டிய வரலாறு வாழ்கையின் துவக்கத்தில் மட்டும் வந்து போகும் கனவாக இருந்து விடுகிறது. ஆமாம் நம் புத்தகத்தில் உள்ள கதைகளும் கட்டுரைகளும் எங்கிருந்து வந்தன? இந்த கேள்வியை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது கேட்டதாக நினைவில்லை. எனினும் வாழ்க்கை […]
கில்லர் சாராயம்
கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி. இந்த 2024 ஆம் ஆண்டிலும் கள்ளச்சாராயம் குடிக்க அவசியம் என்ன இருக்கிறது. தமிழ்நாடு என்ன சவுதி அரேபியா போல, குஜராத் போல சரக்கு கிடைக்காத இடமா? அரசாங்கமே ரேஷன் கார்டுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர் என்று கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற ரீதியில் இங்கே வியாபாரம் படுஜோராக இருக்கிறது. மேலும் வட இந்திய மாநிலங்கள் போல இங்கே பணப்புழக்கம் இல்லாமலும் இல்லை. சின்ன சின்ன தொழிலாளியும் கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல […]
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை கண்ணதாசன் இந்தப்பாடல் வரிகள் வந்து சரியாக 64 வருடங்கள் ஆகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு முன் சென்றாலும் நமக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த ஆலோசனை இதுவாகத்தான் இருக்கும்.. இதன் கருத்து என்னவென்றே இப்போதைய தலைமுறையில் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். ” Life has to move on” என்று ஆங்கிலத்தில் இன்று பல நேரமும் கொடுக்கப்படும் அறிவுரை சித்தாந்தம் தான் அந்தப்பாடலின் வரிகள் உணர்த்தியவை. இன்று நம் வாழ்வில் ஏதோ […]