Categories
அறிவியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? மொதுவா இந்த வாக்கியத்தைத் துரு துருவென சேட்டைகள் அதிகம் செய்யும் குழந்தைகளைக் கடிந்து கொள்வதற்காக சிலர் உபயோகப்படுத்துவது. ஆனால் இங்கே இந்த வாக்கியம் ஆச்சரியத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஏன் என்பதை கட்டுரை முடிந்த பிறகு அறிந்து கொள்ளலாம். ஏன் நீங்களே கூட கேட்டுக் கொள்ளலாம், பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? இந்தப் பேராசியர் பெயர், சோபோர்னோ ஐசக் பாரி. இவர் ஏப்ரல் 9, 2012 ல் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் மருத்துவமனையில் பிறந்தார். இப்போது நீங்கள் […]

Categories
கருத்து குட்டி கதை தகவல் தற்கால நிகழ்வுகள்

பேராசை பெருநஷ்டம்- இணைய மோசடிக் கதைகள்

பேராசை பெருநஷ்டம் இதனை விளக்க வழக்கமாக சொல்லப்படும் கதைகளில் முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி இருந்தார் என்றும், முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் வளர்ந்த தங்க முட்டையிடும் வாத்து என்றும் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் இதை விளக்குவதற்கு முன்னொரு காலக் கதை எல்லாம் தேவையில்லை. தினம் தினம் செய்திகளில் பேராசையால் பெருநஷ்டமடைந்த பல மக்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு்தான் இருக்கிறோம். ஆன்லைன் மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி, பங்கு பரிவர்த்தனை முதலீடு […]

Categories
கருத்து தமிழ்

சிசேரியன் எனும் அறுவை அரக்கன்

சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெறுவதில் தென் மாநிலங்களான, தெலுங்கானா, தமிழகம் மற்றும் ஆந்திரா முதலிடம். முன்பெல்லாம் பிரசவம் என்றால் ஒரு நாலு பெண்கள் வீடுகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி மறைத்து, சுடுதண்ணீர் எடுத்து, ஏதோ செய்வார்கள், குழந்தை பிறக்கும், தொப்புள் கொடி அறுக்கப்பட்டு , குழந்தையை சுத்தம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். காலப்போக்கில் மருத்துவ வசதிகள் அதிகரித்த பிறகு, பிரசவம் என்பது வீடுகளில் செய்யப்படும் விஷயமல்ல.அதில் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தி என்பது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் குறள் 10 இறைவனின் திருவடிகளை அடைந்தவரால் மட்டுமே இந்தப்பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும் என்பது வள்ளுவர் வாக்கு. இறைவனின் திருவடியை அடைவது எப்படி? கள்ளம்கபடமில்லா பக்தியும், சக உயிர்களுக்கு நாம் செய்யும் உதவியும், நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை நெறியும் தான் நம்மை அந்த இறைவனின் திருவடியில் சேர்க்கிறது. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பக்தி என்பது என்ன என்பதை […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

அலட்சியத்தின் விளைவு

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் பயப்பட வேண்டிய சில விஷயங்களுக்கு பயப்படாமல் அலட்சியம் காட்டுவது, மூடத்தனம். அந்த அலட்சியத்தின் விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தனை அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலத்திலும், ரயில்வே க்ராஸிங் அதாவது தண்டாவளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. அத்தனை துல்லியமான தகவல் வந்து, நேரத்திற்கு கதவுகள் முடப்பட்ட பிறகும், ரயில் வர தாமதமாகும் சிறிது நேரத்தில் […]

Categories
கருத்து தமிழ்

ஊழியரா?வீட்டு நாயா? நமது வேலைக் கலாச்சாரம் சரியா?

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்புகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,மாலை முழுதும் விளையாட்டு என்று பாரதியார் பாடியது பாப்பாக்களுக்கு மட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கத் துவங்கி விட்டார்களோ தெரியவில்லை. பிரத்தேயமாக தனியார் நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்தப்பதிவு. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற ஒரு வாக்கியம் ஏன் சொல்லப்படுகிறது என்பதை உணராமல், வீட்டுநாய்கள் போல 24 மணிநேரமும் வேலை செய்வதைச் சாடித்தான் இந்தப்பதிவு. ஆம். இன்றைய சூழலில் பெரும்பாலான தனியார் […]

Categories
கருத்து சினிமா தமிழ்

சினிமா-வியாபாரமா? சேவையா?

குறை சொல்வதற்காக அல்ல. ஆனால் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம். ஒரு திரைப்படம் நன்றாக ஓடுகிறது. அரிதாரம் பூசி நடித்த நடிகருக்கு பல கோடிகளில் சம்பளம், சில பல பரிசுகளும் கிடைக்கிறது. படமெடுத்த இயக்குனருக்கு பல கோடி சம்பளம். மற்ற துறைகள் எப்படி இருக்கின்றன? நிலவில் கால் பதித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளுக்கு வெறுமனே லட்சங்களில், சம்பளமும் பாராட்டும் மட்டும். ஒரு உயிரைக்காப்பாற்ற புதுவிதமான அரிய அறுவை சிகிச்சை செய்து […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஐயப்பனுக்கே தீட்டா? அபாய மூடநம்பிக்கையின் அடுத்த அடி.

ஐயப்ப பக்தர்கள் வாவர் சமாதிக்குச் சென்றுவிட்டு, தரிசனத்திற்கு வருவது தீட்டு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மாதிரியான விஷயங்களைத்தான் நம் நினைவுகள் பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம். நாம் என்றுமே சாமி கும்பிடுவதையோ, மாலை அணிந்து விரதம் இருக்கும் சாதாரண மற்ற பிற விஷயங்களையோ எதிர்த்தோ, கேலியாகவோ பேசியது இல்லை. திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்ததா இல்லையா என்பதே உறுதி ஆகாத முன்பு தீட்டுக் கழிக்கிறேன் என்று ஹோமம் நடத்தியதைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம். கடவுள் என்பதன் பொருள், […]

Categories
கருத்து தமிழ்

சமுதாய சீரழிவும், நாமும், சினிமாவும்.

சினிமாவை வெறும் சினிமாவாக, பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் மனநிலை எப்போது வருமோ நமது மக்களுக்கு? ரஜினி, விஜய் எனத்துவங்கி இப்போது சாதாரண கதாநாயகர்கள் வரை சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்படது போலவே ஆகிப்போனது. காரணம் என்னவென்றால், அவர்கள் சிகரெட் பிடிப்பதால் , அவர்களைப் பார்த்து இளைஞர்களும் சிகரெட் பிடிப்பார்கள் என்ற வாதம். முதலில் அது சினிமா, அது ஒரு கற்பனை கதை, கற்பனை உலகம். அந்தக்கதையில் அந்த கதாபாத்திரம் சிகரெட் பிடிப்பதையோ, கொலை செய்வதையோ, நாம் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கடவுள் இருக்காரா ? இல்லையா?

கடவுள் நம்பிக்கை. தெய்வத்தால் ஆகாத காரியமும் கடுமையான முயற்சியால் கைகூடும் என்பது வள்ளுவன் வாக்கு. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் பகுத்தறிவு என்பது என்ன சொல்கிறது? சாமியும் இல்ல பூதமும் இல்ல. கடினமாக உழைத்தால் எதிலும் வெற்றி பெறலாம், மதியால் விதியை வெல்லலாம். இதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சந்தேகம் எழுகிறது. சில ஆயிரம் ரூபாய் கொடுத்து பாட்டுக்கச்சேரியை பார்க்க வருபவனுக்கு உட்கார கூட இடம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு திரும்பி செல்லும் சூழல் வரும்போது, […]