Categories
கருத்து குட்டி கதை பாடல்

வாழ நினைத்தால் வாழலாம்..

மனிதன் வாழ்க்கை சிறப்பாகும் எப்போது? துயரத்தில் தோள் கொடுக்கவும், சந்தோசத்தை தூக்கி நிறுத்தவும், நல்லது செய்யும் போது பாராட்டவும், பாதை தவறும் போது அதட்டவும் ஆள் இருக்கும் போது. அப்படி எல்லாமாக. இருந்த ஒருவரை இழக்கும் போது வாழ்க்கையே முடிந்த எண்ணம் வரும். ஆனால் அத்துடன் வாழ்க்கை முடிவதில்லை. எங்கிருந்தோ ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். தேடிப் பிடிக்கத் தெம்பிருந்தால் போதும். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்? ஆழக்கடலும் சோலையாகும் ஆசை […]

Categories
கருத்து

பொறுப்பு வேண்டாமா? பிரபலங்களே!

சமீபத்தில் தினசரி ஒன்றில் ஒரு தலையங்கம் கண்டு வியந்தேன். ஆந்திர மாநிலத்தில் பொறுப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே தரமில்லாத பொருட்களை சேர்த்ததற்காக சில பிரபலங்களின் மீது வழக்குகள் பதியப்பட்டதாக ஒரு செய்தி. இது போல பொறுப்பில்லாத பிரபலங்களை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்பது தான் நமது வாதமும். முதலில் குழந்தைகளின் உணவுப் பதார்த்தங்களில் துவங்கும் இந்த விஷயம், வாழ்வின் இறுதி வரை நாம் உபயோகிக்கும் அத்தனை பொருட்களையும் நம் விருப்பமில்லாமல் நமது தலையில் கட்டுகிறது. […]

Categories
இலக்கியம் கருத்து தற்கால நிகழ்வுகள்

கேடு காலத்தில் (கேடுகெட்ட) நண்பர்கள் – திருக்குறள் விளக்கம்

இனிய துவக்கம், முதல் வார்த்தை நல்ல வார்த்தையாக அமைய வேண்டுமென்பதற்கான இணைப்பு வாக்கியம் தான் அந்த இனிய துவக்கம். கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு என்று சில நேரம் நாம் ஏதாவது ஒரு பாதிப்பைச் சந்திக்கும் போது சொல்வதுண்டு. கெட்டதுல என்ன பெரிய நல்லது நடந்துடப் போகுது? நம்ம உறவுக்காரங்கள்ல யாராவது ஒருவர் தவறும்பட்சத்தில், நீண்ட நாள் பேசாமலிருந்த மற்றொரு உறவுக்காரர் வந்து பழக நேரிடலாம். இது மாதிரியான அனுபவங்கள் இங்கு பலருக்கும் இருக்க வாய்ப்புள்ளது. இதே […]

Categories
அறிவியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

நம்பிக்கை ஒன்றே போதுமே!

விடியும் என்று நம்பித்தான் நிம்மதியாக உறங்குகிறோம். அதைப்போலவே முடியும் என்று நம்பி படபடப்பு இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்தால் நிச்சயமாக முடியும். ஒருவேளை அது முடியலாம், அல்லது அந்த முயற்சி வெற்றியைத் தராமலும் போகலாம் ஆனால் முயன்றது தோல்வி அல்ல. முயற்சி என்பதே வெற்றி தான் என்பதை உணர்ந்தி கொண்டால் இந்த உலகை வென்று விடலாம். உலகை வென்று விடலாம் என்றால், மாவீரன் நெப்போலியன் போல படைகொண்டு உலகைக் கட்டி ஆள்வதல்ல. ஒரு முயற்சியில் நாம் தோல்வியுறும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் கட்டாயம்!

சமீபத்திய மாநில நிதிநிலை அறிக்கையில் அரசு அதிகாரிகளுக்கு அவர்களே வியக்கத்தக்க வகையில் பல சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டிருந்தது. அரசு வேலையில் இருப்பவர்கள் உயிர் துறக்கும் பட்சத்தில் மகளுக்கு திருமண செலவுக்கு 5 லட்சம், 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு என பிரம்மாண்ட சலுகைகள் வழங்கப்பட்டன. தனியார் ஊழியர்கள் பலரும் நிரந்தரமான வேலைச்சூழல் மற்றும் நியாயமான சம்பளம் என்பனவற்றிற்கே திண்டாடும் போது அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இத்தகைய சலுகை கொடுப்பதை இங்கே யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இதனால் […]

Categories
அறிவியல் கருத்து தற்கால நிகழ்வுகள் வரலாறு

இனியாவது விழித்துக்கொள்வோமா? – பிளாஸ்டிக் டப்பாவில் சொடக்குத் தக்காளி

எப்படி ஆரம்பிக்கலாம் என்று தான் புரியவில்லை.யாரைத் திட்டுவது, யாரைப் பாராட்டுவது என்பதும் புரியவில்லை. ஆனால் நாமெல்லாம் முட்டாள்கள், வடிகட்டிய முட்டாள்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.நேற்று காலை எனது உறவினரிடமிருந்து ஒரு புலனச் செய்தி. அதில் ஒரு புகைப்படம், இது என்ன என்று தெரிகிறதா என்ற கேள்வியோடு. இதென்ன தெரியாதா?சொடக்குத் தக்காளி, சில பேருக்கு மணத்தக்காளி என்றால் புரியும். ஆனால் அது அடைபட்டிருந்த டப்பாவையும், அதன்மீது ஒட்டப்பட்டிருந்த விலையையும் பார்க்கும் போதுதான் பகீரென இருந்த்து. தோராயமாக ஒரு பத்து […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

நல்லதைப் பாராட்டு – காட்பரீ விளம்பரம் உணர்த்தும் உண்மை

அறிவை, அன்பைப் பகிர மொழி அவசியமில்லை.ஒரு செயலோ, சைகையோ அல்லது ஒரு புன்னகையோ கூடப் போதும்தான். ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடம் நாமென்ன பேசிப் பழகியா அன்பைப் பகிர்கிறோம்? ஐந்தறிவென்ன நம்மில் பலர் உயிர் இல்லாத வாகனங்கள் உட்பட சில பொருட்களின் மீதும் கூட பேரன்பு கொண்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் மொழி அவசியமில்லை. உலகில் மொழி வரும் முன்பே, அன்பும் அறிவும் பகிரப்பட்டு தான் இருந்திருக்கிறது. கும்மிடிப்பூண்டி தாண்டினால் சோறு கிடைக்காது, ஏக் சாய் தேதோ என ஹிந்தி பேசத் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவையற்ற நுகர்வு தெருவில் தான் சேரும்.

குழம்ப வேண்டாம். நிறுத்துமிடமில்லாமல் இல்லாமல் கார் வாங்கக் கூடாது என்ற அரசாங்க நடவடிக்கை பற்றிய சிந்தனை. சமீபத்திய பகட்டுக் கட்டுரையில் நாம் பேசிய பல விஷயங்களைப் போல இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கார் வாங்குறீங்களே?அத நிறுத்த இடமிருக்கா? இந்தக் கேள்வியை அது வரை யாருமே கேட்டதில்லை. இது வரை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவ்வளவு தான்.உங்களுக்கு சிலர் எவளோ, பான் கார்டு , ஆதார் கார்டு கொடுங்க, 0 டவுன் பேமண்ட்ல அடுத்த மாசம் கார் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பகட்டா, உயிரா? சிந்திப்போமா?

வரவு எட்டணா, செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் குந்தணா என்ற பாடலையும், கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல என்ற பாடல்கள் வெளிவந்து பல காலம் ஆகி விட்டதால் நாமும் அதை மறந்து விட்டோம். சிக்கனம் என்ற வார்த்தை கிட்டத்தட்ட கஞ்சன் என்ற ரீதியில் கேலிக்குரிய வார்த்தையாகவே மாறிவிட்டது. ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைப் போல, எவ்வளவு செலவு செய்கிறான் என்பதிலும் பகட்டுப் போட்டி வந்து விட்டது. முன்பு எதிர் வீடு […]

Categories
கருத்து நினைவுகள்

வாசிப்பையும் நேசிப்போமே! – நினைவுகளைப் பற்றி – ஆசிரியர் குறிப்பு

இரவில் தூங்கும் முன் கதை சொல்லி, அறிவுரை சொல்லி, வியாக்கியானங்கள் பேசி தூங்க வைக்கும் தாத்தா பாட்டிகள் இங்கே இப்போது இல்லை. தாத்தாவும் ஃபேஸ்புக்கில் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார், பாட்டியும் கூட சன் டிவியிலோ, விஜய் டிவியிலோ சீரியல் பார்த்துக்கொண்டிருக்கிறது. பிள்ளைகள் ஆங்ரி பேர்டாகவோ, டெம்பிள் ரன்னராகவோ மாறி ஒரு மாதிரியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கதையை வாய் வழியாகச் சொல்லி செவி வழியாகக் கேட்ட போது குழந்தைகளிடையே இருந்த சிந்திக்கும், உருவகப்படுத்தும், கவனிக்கும் திறமை இப்போது […]