Categories
தற்கால நிகழ்வுகள்

நீதி நிலைநாட்டப்பட்டது

தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்ற வாசகங்களைப் பல இடங்களில் கடந்து வந்திருக்கிறோம். ஒரு ஆத்திரத்தில் தன்னிலையறியாமல் செய்த குற்றங்களுக்கு வேண்டுமானால் பரிசீலித்து குற்றவாளி மனம் திருந்தும்படியாக தக்க தண்டனை கொடுக்கப்படலாம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் படுகொலைகளை அலசி ஆராய்ந்து கருணை காட்டுவது என்பது நியாயமாகாது. கண்டிப்பான முறையில் எதிர்காலத்தில் இன்னொருவர் அது மாதிரியான தவறை தவறிக் கூடச் செய்யத்துணிந்து விடக் கூடாது. அந்தளவிற்கு கடுமையான தண்டனை அதாவது, உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கி, நீதியை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கலியுகக் கர்ணன். நூற்றாண்டில் ஒருவன்

இந்தக் கலியுகத்தில் இப்படியும் ஒருவரா? நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமா மழை என்ற பாடலின் வரிகள் இவருக்குத் தான் பொருந்துமோ? இவர் பெயர் கல்யாண சுந்தரம். ஆனால் இவர் பாலம் கல்யாண சுந்தரம் என்றே அழைக்கப்படுகிறார். பாலம் என்பது இவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் பெயர். ஊரில் ஆயிரமாயிரம் தொண்டு நிறுவனங்கள் இருக்கும் போது இவருக்கு ஏன் இவ்வளவு அதிகப்படியான விளம்பரம் என்று நினைக்கத் தோன்றலாம். அது ஏன் என்பதை அவரது கதையிலிருந்து அறிந்து […]

Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

மறைந்தார் மன்மோகன் சிங்

ஒவ்வொரு இந்தியரும் மறக்க முடியாத டிசம்பர் 26 ஆம் தேதியில் இன்னொரு துயரச் செய்தி. நம் அனைவருக்கும் விருப்பமான நல்லதொரு மனிதன். அமைதியான, அற்புதமான மனிதன் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார். இவர் பிரதமர் என்ற பதவியை அடையும் முன்பாகவே, நிதியமைச்சராக, பொருளாதார நிபுணராக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இந்தியப் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்துள்ளார். இவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை இந்தியாவை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

வெள்ளைக் காகிதத்தில் கருப்பு மை.

இதை எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை. வன்மையாகக் கண்டிப்பதா? கோபம் கொள்வதா? வருத்தப்படுவதா? இல்லை பரிதாபப்படுவதா? இது எல்லாமே இந்த விஷயத்தில் அடக்கம். தமிழ்நாட்டின் முதன்மைப் பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே ஒரு இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல். அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இது முதல் சம்பவம் அல்ல என்பது. ஒரு பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தில், அதுவும் நகரின் மிக முக்கியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தினுள், ஒருவன் இந்த மாதிரியான பாலியல் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்தின் இனிய பயண நினைவுகள்

அரசுப் பேருந்தில் ஏற்பட்ட கசப்பான நினைவுகளைப் பகிர்ந்தோம். அவர்கள் மீது நாம் கொடுத்த புகாருக்கும் பதில் கிடைத்தது.போக்குவரத்துத் துறையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக்கோரியதோடு, அவர்கள் இருவரையும் கண்டிப்பதாகச் சொன்னார்கள். ஒட்டுமொத்த அரசுப் போக்குவரத்தும் குறை சொல்லத்தக்க வகையில் அல்ல. இது ஒரு அருமையான பயண அனுபவம் பற்றிய பதிவு. சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊருக்கு சென்ற பிறகு குடும்பத்துடன், எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம்..முன்பதிவுகள் அற்ற நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் […]

Categories
கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

என்று தணியுமோ இந்த மாய மோகம்.

என்று தணியுமோ? இதற்கு முன்பு இந்த வார்த்தைகள் என்று தணியுமோ இந்த சுதந்திர தாகம் என்று ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்காக உபயோகிக்கப்பட்டது. கிட்டதட்ட அதே அளவு தாக்கமுடைய இன்னொரு விஷயத்திறகுத் தான் இந்த வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். அப்படி நான் இப்போது இந்த வார்த்தைகளை உபயோகிக்கப் போவது இதற்காகத்தான். என்று தணியுமோ இந்த சினிமா பிரபலங்கள் மீதான மோகம்? ஆம். இன்று பள்ளிக் குழந்தைகள் முதல் பல் போன கிழவன் கிழவி வரை பெரும்பாலானோர் சினிமா மீதும் […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

விடுதலை- திரை விமர்சனம்

பெரும்பாலான திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்றாலும், சினிமாவின் சக்தி என்பது அளப்பரியது. பணக்கார மக்கள் முதல், பாமரன் வரை ஆழமான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகம் சினிமா தான். அப்படி ஒரு கருத்தியல் ரீதியான படம் தான் இந்த வாரம் வெளியான விடுதலை பகுதி-2. இந்தப்படமும் கிட்டத்தட்ட தீபாவளி வெளியீடான அமரன் படம் போல ஒரு போராட்ட களத்தில் இரு அணிகளுக்கு எதிரான போராட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படம். ஆனால் […]

Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]

Categories
அறிவியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? மொதுவா இந்த வாக்கியத்தைத் துரு துருவென சேட்டைகள் அதிகம் செய்யும் குழந்தைகளைக் கடிந்து கொள்வதற்காக சிலர் உபயோகப்படுத்துவது. ஆனால் இங்கே இந்த வாக்கியம் ஆச்சரியத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஏன் என்பதை கட்டுரை முடிந்த பிறகு அறிந்து கொள்ளலாம். ஏன் நீங்களே கூட கேட்டுக் கொள்ளலாம், பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? இந்தப் பேராசியர் பெயர், சோபோர்னோ ஐசக் பாரி. இவர் ஏப்ரல் 9, 2012 ல் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் மருத்துவமனையில் பிறந்தார். இப்போது நீங்கள் […]

Categories
கருத்து குட்டி கதை தகவல் தற்கால நிகழ்வுகள்

பேராசை பெருநஷ்டம்- இணைய மோசடிக் கதைகள்

பேராசை பெருநஷ்டம் இதனை விளக்க வழக்கமாக சொல்லப்படும் கதைகளில் முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி இருந்தார் என்றும், முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் வளர்ந்த தங்க முட்டையிடும் வாத்து என்றும் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் இதை விளக்குவதற்கு முன்னொரு காலக் கதை எல்லாம் தேவையில்லை. தினம் தினம் செய்திகளில் பேராசையால் பெருநஷ்டமடைந்த பல மக்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு்தான் இருக்கிறோம். ஆன்லைன் மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி, பங்கு பரிவர்த்தனை முதலீடு […]