Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கோவில் யானையின் கோவம் – யார் தவறு?

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி, பாகன்கள் இருவர் பலியான சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது. இது சம்பந்தமாக வலைதளத்தில் சில கருத்துகள் பரவி வருகிறது. அதாவது மிருக குணம் கொண்ட காட்டு மிருகமான யானை வளர்க்கத் தகுந்ததல்ல.அதை அதன் போக்கில் விடுவதே சரி. இப்படி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து வேடிக்கை காட்டி, சம்பாதிப்பது தவறு என்ற ரீதியில் பலரும் பேசி வருகின்றனர். இந்த விஷயத்தில் நாமும் அதே பக்கத்தில் தான் நிற்கிறோம். பல நேரங்களில் பக்தி என்பது […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

பக்தியா அல்லது பரவசப் போட்டியா?

சமீபத்திய செய்தி: திருச்செந்தூர் பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் காரணத்தால் பௌர்ணமி அன்று இரவு கடற்கரையில் யாரும் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல். இந்தச் செய்தியின் பின்புலம் என்னவென்றால், மாதந்தோறும் திருச்செந்தூரில் பௌர்ணமி இரவில் தங்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த எண்ணிக்கை கிட்டதட்ட லட்சத்தைத் தொடுகிறது. இப்படி கடற்கரையில் லட்சம் மக்கள் படுத்து உருளுவதால், காவல்துறைக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது, சுகாதார சீர்கேடு உருவாக வழிபிறக்கிறது, சுற்றுச்சூழல் மாசடைய வழிவகுக்கிறது என்பதெல்லாம் மறுக்க […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஏமாற்றப்படும் ‘பக்தி’ மான்கள்.

ஔவையே! சுட்டபழம் வேண்டுமா , சுடாத பழம் வேண்டுமா என்பது பழைய முருகன் கதை! ஐயா, 30 ரூ தேங்காய் வேணுமா அல்லது 3 லட்ச ரூபாய் தேங்காய் வேணுமா என்பது ட்ரென்டிங் கதை. ஆமாம் ஒரு தேங்காய், 3 லட்சம். அப்படி என்ன விஷேசம் அதில் எத்தனை பேருக்கு சட்னி வைக்கலாம் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். ஆன்மீகம், கடவுள் பக்தி என்பது மனிதனை நல்வழிப்படுத்தினால் சிறப்பு என்று சமீபத்திய கட்டுரை ஒன்றில் பார்த்தோம். (நடப்பு அதிசயம்). அதே […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

நடப்பு அதிசயம்- கதவில்லா கிராமம்.

நம்மில் பலர் இதை எங்காவது கேள்விப்பட்டிருக்கலாம் சிலர் அறிந்திருக்கலாம்.ஆனால் தெரியாதவர்களுக்கு இது அதிசயம் தான். தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். சமீபத்தில் தமிழில் வெளியான நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் கூட ஒரு ஒழுக்கமான கிராமத்தைப்பற்றி காட்டியிருப்பார்கள்.ஆனால் அதைவிட ஒழுக்கமான கிராமம் நிஜத்தில் இன்றளவும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நாங்க இருக்கோம் என்கிறார்கள், இந்த சனி சிங்னாப்பூரார்கள். ஆமாம். மகாராஷ்டர மாநிலம், அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள சனி சிங்னாப்பூர் என்ற கிராமம் தான் அது. […]

Categories
ஆன்மீகம் தமிழ் நினைவுகள்

ஊர் சுற்றலாம் வாங்க- நாசிக் நகர அழிகியல் – இரண்டாவது பாகம்

அழகிய நாசிக் நகரின் அழகியலை வர்ணித்த முதல் பகுதியின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது பகுதி. ஒரு ஊரில் இத்தகைய சிறப்புகள் மொத்தமும் இருப்பதைக் கண்டு வியந்து போனேன். இது ஒரு பகுதி மலை வாசஸ்தளம். கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரம் கொண்டது.நமது மாநிலத்தின் ஊட்டியில் பாதி உயரம்.ஆதலால் இங்கு ஊட்டியின் தட்பவெப்ப சூழலில் பாதியை அனுபவிக்கலாம். அடுத்தது, இந்த நகரம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது.ஆர்ப்பரித்து ஓடும் நதியின் அழகில் மயங்கித்தான் போகிறோம். ராமாயண காவியத்தோடு மிகுந்த […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

அமாவாசை சம்பிரதாயம்- சடங்கா அல்லது வியாபாரமா?

முதலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி என்ற இரு நாட்களும் பூமியின் சுழற்சியால் மாதம் ஒரு முறை வரும் சுழற்சியான நாட்கள் என்பதையும், இந்த இரு நாட்களுக்கும் விசேஷ சக்தி என்பதெல்லாம் இல்லை என்பதையும், ஈர்ப்பு விசையில் உள்ள மாறுதல் காரணமாகவே கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளன என்பதையும் அறிவியல் பூர்வமாக நாம் அறிந்திட வேண்டும். சரி இது அறிவியல்.அதாவது ஒரு இருசக்கர வாகனம், அல்லது ஒரு மகிழுந்து எப்படி இயங்குகிறது என்று கேட்டால், இயந்திரவியல் விளக்கம் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தியா/மூடநம்பிக்கையா? என்னுடையது என்ன?

சில விஷயங்களின் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்பதே தவறு என்று காலம் காலமாக வழக்கப்படுத்தப்பட்டு விட்டதால் மூடநம்பிக்கை என்ற ஒன்றை இன்றும் கூட அழிக்க முடியாமல் உள்ளது. பக்தி என்பதை இங்கு யாரும் குறை கூறவில்லை. கடவுளின் மீதான நம்பிக்கையும், பயமும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்றால் அதைவிட இந்த உலகத்திற்கு என்ன மகிழ்ச்சி இருந்து விடப்போகிறது? ஆனால் அந்த பக்தியின் பெயரால் நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கை சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், பிற மனிதர்களின் மீதான வன்முறைகளையும் சரி […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

ஆன்மீகம் என்பது அடுத்தவனை குறைப்பதா?

கடவுள் என்பதை கட- உள் என்று பிரித்து உன் உள்ளே இருக்கும் நல்ல ஆன்மாவை உற்றுநோக்கி அது சொல்லும் வழியில் நடப்பது தான் ஆன்மீகம் என்றும், கடவுள் என்பது நம்மிலிருக்கும் நல்ல குணங்களின் பிரதிபலிப்பே எனவும் பல நேரங்களில் பல மதத்தலைவர்களாலும் விளக்கப்பட்டிருந்தாலும் கூட மனிதன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இங்கே நாத்திகம் பேசும் மனிதர்கள் யாரும் கோவிலை இடிக்கவோ, கடவுளின் சிலைகளை அவமதிப்பதோ இல்லை. ஆத்திகவாதி, கடவுளின் பக்தன் என்று கூறிக்கொண்டு அன்றாடம் பக்தி […]

Categories
ஆன்மீகம் தமிழ்

அறிவோம் ஆன்மீக தகவல் – வைஷ்ணோ தேவி

திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வந்து வழிபடும் தலமான மாதா வைஷ்ணோ தேவியின் தலத்தைப் பற்றி வாசித்து, சிந்தித்து, நன்மை அடையலாம் என்ற நோக்கில் இந்த கட்டுரை. ஆண்டுதோறும் கிட்டதட்ட 8 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவதாக தகவல். மாதா வைஷ்ணோ தேவி கோவில் என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ள கோவில். சக்தி வழிபாட்டிற்கு பிரபலமான இத்தலத்தின் தெய்வம் மாதா ராணி அல்லது வைஷ்ணவி தேவி போன்ற பெயர்களால் […]

Categories
ஆன்மீகம் தமிழ்

அறிவோம் ஆன்மீக தகவல் -திருக்குறுங்குடியின் கோவில்கள்

அறிவோம்- ஹரி ஓம்.இந்து மதத்தின் இரு முக்கிய பிரிவுகளான சைவமும், வைணவமும், அதாவது பெருமாள் சன்னதியும், சிவன் சன்னதியும் ஒருசேர இருக்கும் கோவில்கள் அரிது தான். அப்படி ஒரு தலம் தான் திருக்குறுங்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான அழகிய நம்பிராயர் தலம். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் உள்ளது. திருக்குறுங்குடி என்ற கிராமம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் என்ற ஊருக்கு அருகே, மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் […]