சிறிது காலத்திற்கு முன்பு வரை வழக்கத்திலிருந்த, குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும்.
நம் மக்கள் குடத்தின் வாய் வரை தண்ணீர் பிடித்து விட்டு , அதில் சிறிது தண்ணீரை மொண்டு கீழே சிதறிவிட்டு அதன்பிறகு தூக்கிச் சும்ப்பது..
குடம் நிறையும் முன்பே குழாயை நிறுத்தும் பழக்கம் பெரும்பாலானோர்க்கு இல்லை.
குடத்தில் அதிகபட்சமூக நிரப்பப்பட்ட அந்தத் தண்ணீர் போலத்தான் நமக்கு அன்றாடம் ஏற்படும் குழப்பங்களும்.. தேவையே இல்லாதது.
சிந்திக்கும் போதெல்லாம், நல்ல யோசனையும் வரும், குழப்பமும் வரும். அதற்காக சிந்திப்பதை நிறுத்தக்கூடாது.
குழப்பத்தைத் தூக்கி எறிந்து விடலாம்.
ஆனால் அளவுக்கதிகமான குழப்பம் நம்மை செயல்பட விடாது..
குடத்தின் வாய்ப்பகுதியில் இருக்கும் தேவையில்லாத உபரி தண்ணீர் போல குழப்பங்களை எடுத்து எறிந்து விட்டு அடுத்த நடவடிக்கையைப் பார்க்கப் பழகிக்கொண்டால் சிறப்பு..
மனமும் , மூளையும் சிந்திக்கவும் செயல்படவும் தான்..சிந்திக்க மட்டுமல்ல..
சிந்தனையும் செயலும் சரிவிகித்த்தில் இருக்கும் வரை வாழ்க்கை சிறப்பு தான்..