Categories
நினைவுகள்

குழந்தைகள் அழுதுவிட்டன, நாம் என்ன செய்ய?

ஆம் குழந்தைகள் அழுதுவிட்டன.நாம் என்ன செய்ய? ஒரு குடும்பமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒன்றுகூடும் போது, நமது உறவினர்களை கண்டுகளித்து உறவாடி மகிழும் போது மனதிலிருக்கும் பாரமெல்லாம் காணாமல் போகும். அந்தக்காலங்களில் ஏதாவது சின்ன சின்ன விஷேசமாக இருந்தாலும் மொத்தக் குடும்பத்தையும் கூப்பிட்டு விழாப்போல நடத்திய வழக்கம் உண்டு.விஷேச வீட்டாரின் வசதிக்கு ஏற்றார் போல, விருந்தும் மற்ற உபசரிப்புகளும் இருக்கும். விஷேச வீட்டினர் எத்தகைய வசதியோடிருந்தாலும், மொத்த சொந்தமும் வந்திருந்து விழாவை சிறப்பித்து விட்டுச் சென்ற வழக்கம் […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 4

பாகம் 01, பாகம் 02, பாகம் 03 மல்லிகா மீண்டும் பழைய வாழ்வின் நினைவுகளை அசை போடத்துவங்குகிறாள். அடிபட்ட மகன் மல்லிகாவின் மடியை ஆக்கிரமித்துக்கொள்ள, மூத்தவன் மல்லிகாவின் தோளில் சாய்ந்து கொண்டான். விவரம் தெரிந்த பின் மூத்த பிள்ளை தாயின் அரவணைப்பை தேடும் முதல் தருணம் இதுதான்.மல்லிகாவுக்கும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.“அம்மா, தம்பிக்கு என்னால தாம்மா இப்படி ஆச்சு”, என்று வெடித்து அழத்துவங்குகிறான். “விடுடா, நான்தான் எப்படி ஆச்சுணே கேட்கலியே டா?எப்படியும் விளையாடும் போது பட்ட அடிதானே? தெரியாம […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 3

பாகம் 01, பாகம் 02 மல்லிகாவோ மனதில் திகிலுடனும், பக்தியுடனும் கடவுளாக மருத்துவரை கை எடுத்து கும்பிட்டு என்ன ஆச்சுங்கய்யா என்று கேட்க,மருத்துவர், “பயப்படும்படியா ஒன்னுமில்ல மா!கண்ணுக்கு மேல பட்ட அடி கண்ணுல பட்டிருந்தா கஷ்டமாயிருக்கும். அடி பலமா பட்டதால நிறைய இரத்தம் போயிருக்கு, அத பாத்ததும் பையன் மயங்கிட்டான்.” “நான் வலிக்கு ஊசி போட்டு, அந்த இடத்துல தையல் போட்டுருக்கேன், அங்க நர்ஸ்ட்ட மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிக்கோங்க, எப்படி சாப்பிடனும்னு கேட்டுக்கோங்க!” “இப்ப பால் […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 02

பாகம் 01 குருதி வெள்ளத்தில் மகனை பார்த்த மல்லிகாவுக்கு கைகால் அசையவில்லை! ஆனால் பாசம் உந்துமல்லவா? ஏன் எப்படி என்ற கேள்விகளை எழுப்பாமல், மூத்தவனை ஆட்டோ பிடித்து வர சொல்லி சாமர்த்தியமாக செயல்பட்டால் மல்லிகா! பக்கத்து வீட்டு ஆட்டோகாரர் தான்.பணம் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது ஏற்றி பரபரப்பாக ஓட்டிச்சென்றார்! போகும் வழியில் இருந்த தனியார் மருத்துவமனைகளில் வண்டி நிற்கவில்லை. தனியார் மருத்துவமனை என்பது இவர்களை பொறுத்தவரை வெறும் பெரிய கட்டிடங்கள் தான்! வேக வேகமாக திருவான்மியூர் சுகாதார […]

Categories
நினைவுகள்

காணாமல் போகும் அண்ணாச்சி கடைகள்

மளிகைக் கடை அண்ணாச்சிகளும், அவர்களின் கேலியான பேச்சுகளும் என்றைக்குமே நினைவிலிருந்து நீங்கா இனிமை. ஒரு மளிகைக்கடை அண்ணாச்சி என்பவர் அந்த குறிப்பிட்ட பகுதியின் மாட்டுவண்டி அச்சாணி போல இருந்த காலம் மாறி இப்போது இணைய வழிப் பொருட்கள் வியாபாரத்தின் அதிகரிப்பால், அண்ணாச்சிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறி வருகிறது. சிரித்து ஜனரஞ்சகமாகப் பொருட்களை வியாபாரம் செய்து, அதில் ஒரு உறவு ஏற்படுவது அண்ணாச்சிகளின் காலம். உதாரணத்திற்கு, “என்ன அண்ணாச்சி நேத்தே லிஸ்ட் குடுத்தேன், இன்னும் சாமான் போட்டு வக்கலியா?“ […]

Categories
தற்கால நிகழ்வுகள்

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் – நிறைவேறுமா?

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தது இல்லாமல், அவரைக் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அந்தப்பெண்ணுக்கு மருத்துவ உதவியும், நஷ்ட ஈடும் அரசாங்கம் தர முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான். ஆனால் அந்த தண்டனையைச் செய்த நபருக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது இனி இதுபோன்ற செயல்களைச் செய்ய யாரும் துணிந்திரா வண்ணம் இருக்க வேண்டும். அதை பொதுவெளியில் யாரும் மறக்காதபடி செய்ய வேண்டும்! ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி பாலியல் சீண்டல் செய்வதற்கே […]

Categories
அறிவியல் தற்கால நிகழ்வுகள்

உலகம் நம் கையில், நம் மூளை எதன் கையில் ?

உலகமே உன் கையில் என்று நம் கையிலிருக்கும் தொலைநுட்பக் கருவிகள் நமது கையில் உலகத்தைத் திணித்து விட்டு மூளையை அது எடுத்துக் கொள்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. சமீபத்திய ஒரு பயணத்தின் போது, எனது நண்பர் ஒருவர், தனது அலைபேசியின் மின்னூக்கியை மறந்து விட்டு வந்துவிட்டார். என்னுடையதும் அவருக்கு ஒப்பவில்லை. ஆகையால் அவரது அலைபேசி மறுநாள் காலை எழும்போது அணைந்து விட்டது. அவருக்கு ஏதோ ஒரு சின்ன ஆத்திரம், தனது வீட்டிற்கு அழைத்துப்பேச வேண்டும் என்று. நான் […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன்- தொடர்கதை

பாகம் 1 ஒரு அழகான மாலைப்பொழுது, நமது கதையின் நாயகன் கந்தசாமி சென்னையில் பலத்த வாகனங்களின் இரைச்சல்களுக்கு இடையில் சாலையின் ஓரத்தில் நின்று தனது வீடு செல்ல வெள்ளை நிற போர்டு போட்ட பேருந்தின் வருகைக்காக காத்திருக்கிறார்! கந்தசாமியின் வீட்டில் அவரது மனைவி மல்லிகா கணவரின் வருகைக்காக காத்திருக்கிறார்!கந்தசாமிக்கும் மல்லிகாவிற்கும் இரண்டு குழந்தைகள்! இரண்டும் படு சுட்டி, மாலைப்பொழுதில் தெருவில் கூடி விளையாடும் பல்லாயிரக்கணக்கான ஏழைக்குழந்தைகளில் அவர்களும் இருவர்! குழந்தைகள் இரண்டும் மல்லிகாவிற்கு அடங்காது!அப்பா தெருமுனைக்கு வரும்போது […]

Categories
ஆன்மீகம் தகவல்

திருப்பதி பயணம்- இனிய மற்றும் காரசார அனுபவம்

பயணங்கள் பொதுவாக மனிதனைப் பக்குவப்படுத்தும். புதிய மனிதர்களை, புதிய அனுபவங்களை சந்திக்க வைக்கும். அன்றாடம் நாம் பயணிக்கும் சிறிய தொலைவில் கூட சிறிய புது அனுபவங்களை சந்திக்க நேரும், அப்படியிருக்க ஒரு ஆன்மீக சுற்றுலா, புது அனுபவத்தைத் தராமலா போகும்? சமீபத்தில் திருச்செந்தூர் பயணித்த போது நமக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களையும், முகம் சுளிக்கும் சம்பவங்களையும் பகிர்ந்திருந்தோம். ஆனால் திருப்பதி எப்போதுமே முகம் சுளிக்கும் நிகழ்வுகளைப் பரிசாகத் தருவதில்லை. காரணம் கடுமையான நிர்வாக முறை. எப்பேர்ப்பட்ட பெரிய […]

Categories
சினிமா

விடாமுயற்சி- விமர்சனம்

ஆயிரம் வெற்றிகளைக் கண்டவன் அல்ல நான்.ஆயிரம் தோல்விகளைக் கண்டவன். இது ஆயிரத்து ஒன்று என்று கூட சொல்லலாமோ? விடாமுயற்சி, வினையாக்கியதா ? பெரும்பாலான ரசிகர்களுக்கு இது வீண் முயற்சியாகத்தான் தோன்றுகிறதோ? ஆம்.ஹாலிவுட் தரத்திலான படம் தான். ஆனால் படத்தின் நீளம்? 151 நிமிடங்கள். 151 நிமிடங்கள் இருக்கும் ஹாலிவுட் படங்களில் ரசிகர்களைக் கட்டி வைத்திருக்க வேறு ஏதோ ஒரு மாயம் உள்ளே இருந்திருக்கும். ஆனால் இந்தப்படத்தில் அந்த மாயம் உள்ளே இருந்தது போலத் தோன்றவில்லை. எல்லாம் கொஞ்சம் […]