காலை எழுந்தவுடன் படிப்பு, பின்புகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,மாலை முழுதும் விளையாட்டு என்று பாரதியார் பாடியது பாப்பாக்களுக்கு மட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கத் துவங்கி விட்டார்களோ தெரியவில்லை. பிரத்தேயமாக தனியார் நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்தப்பதிவு. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற ஒரு வாக்கியம் ஏன் சொல்லப்படுகிறது என்பதை உணராமல், வீட்டுநாய்கள் போல 24 மணிநேரமும் வேலை செய்வதைச் சாடித்தான் இந்தப்பதிவு. ஆம். இன்றைய சூழலில் பெரும்பாலான தனியார் […]
Month: November 2024
இருதலைக் கொள்ளி என்றால் என்ன? அதாவது இரு பக்கமும் எரியும் தீயால் கொள்ளியின் நடுவில் சிக்கிய எறும்பு தப்ப வழியின்றி மாட்டிக்கொள்வது போல துன்பம் சூழ்ந்து தப்ப வழியின்றி மாட்டிக்கொள்பவரை அப்படி உவமானமாகச் சொல்வர். சரி விஷயத்திற்கு வருவோம். நம் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட விஷயம், திமுகவின் மூடநம்பிக்கை மறுப்புக் கோட்பாடு. திமுக பெரியார் வழியைப் பின்பற்றும் கட்சி என்பதால், ஆன்மீகத்தின் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை அது காலங்காலமாக கடுமையாக எதிர்த்து வருகிறது. சொல்லப்போனால் இது கடவுள் […]

இருபுறமும் புளிய மரம் நிழல் தந்த மதுரை ரோடு. ஆம். மதுரை வரை மட்டுமே எங்கள் உலகம். அந்த ரோடும், மதுரையோடு முடிந்து விடும் என்று எண்ணிய சிறு வயது. மெட்ராஸ் என்ற ஊர் தெரிந்தாலும். அந்த ஊருக்கு, நம்ம ஊரில் இருந்து ரோடு கிடையாது என்ற எண்ணம். மதுரை ரோடு என்றாலே பயம்.வண்டியெல்லாம் வேகமா வரும்.நிறைய பேரு ஆக்ஸிடன்ட்ல இறந்திருக்காங்க.புளிய மரத்துல பேயா இருப்பாங்கனு. ஆனா, மதுரை ரோடு தரும் பரவசம், வேற எங்கும் கிடைப்பதில்லை. […]

கடவுள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மனிதர்களைப் படைக்கிறார். ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை படைக்கப்பட்டவுடன் எல்லாரையும் பூலோகம் அனுப்ப திட்டம் தயார் ஆகிறது. பூலோகம் போகும் முன் கடவுளின் ஏற்பாட்டோடு, ஒரு விருந்தும் தயார் ஆகிறது. மனிதர்களிடம் சொல்லப்படுகிறது.“மனிதர்களே, நீங்கள் பூலோகம் செல்லவிருப்பதால் இங்கே வழி அனுப்பும் விருந்து ஒன்று வைக்கப்படும், சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த அறையில் கடவுள் உங்களை ஆசி கூறி வழி அனுப்புவார். அனைவரும் விரைவாக சாப்பிட்டு வாருங்கள்” என… உடல் படைக்கப்பட்டவுடன், உச்சகட்ட […]

சமீபத்தில் நாம் அனைவரும் கேள்விப்பட்டு, சிலர் வருத்தமும், சிலர் கேலிக்கூத்தும் செய்த செய்தி, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப், வழிகாட்டுதலின் பேரில், மகிழுந்தில் சென்ற மூவர், பாலத்திலிருந்து, மிகிழுந்து கவிழ்ந்து விழுந்து பலி. இதில் மூன்று உயிர் போய்விட்டதே எனப்பலர் வருத்தப்பட்டாலும், சிலர் இந்த செய்தி வெளியான இணையப்பக்கத்தில் சிரித்தும் வைத்திருக்கிறார்கள்.மூன்று உயிர் பலியானதைத் தாண்டி எதை எண்ணி சிரிக்கத் தோன்றியதோ தெரியவில்லை. வேறு சிலர் இது அந்த மாநிலத்தின் அரசியல் கட்சியின் நிர்வாகத்திறமை சரியால்லாத காரணத்தால் […]
குறை சொல்வதற்காக அல்ல. ஆனால் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம். ஒரு திரைப்படம் நன்றாக ஓடுகிறது. அரிதாரம் பூசி நடித்த நடிகருக்கு பல கோடிகளில் சம்பளம், சில பல பரிசுகளும் கிடைக்கிறது. படமெடுத்த இயக்குனருக்கு பல கோடி சம்பளம். மற்ற துறைகள் எப்படி இருக்கின்றன? நிலவில் கால் பதித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளுக்கு வெறுமனே லட்சங்களில், சம்பளமும் பாராட்டும் மட்டும். ஒரு உயிரைக்காப்பாற்ற புதுவிதமான அரிய அறுவை சிகிச்சை செய்து […]
ஐயப்ப பக்தர்கள் வாவர் சமாதிக்குச் சென்றுவிட்டு, தரிசனத்திற்கு வருவது தீட்டு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மாதிரியான விஷயங்களைத்தான் நம் நினைவுகள் பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம். நாம் என்றுமே சாமி கும்பிடுவதையோ, மாலை அணிந்து விரதம் இருக்கும் சாதாரண மற்ற பிற விஷயங்களையோ எதிர்த்தோ, கேலியாகவோ பேசியது இல்லை. திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்ததா இல்லையா என்பதே உறுதி ஆகாத முன்பு தீட்டுக் கழிக்கிறேன் என்று ஹோமம் நடத்தியதைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம். கடவுள் என்பதன் பொருள், […]

சினிமாவை வெறும் சினிமாவாக, பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் மனநிலை எப்போது வருமோ நமது மக்களுக்கு? ரஜினி, விஜய் எனத்துவங்கி இப்போது சாதாரண கதாநாயகர்கள் வரை சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்படது போலவே ஆகிப்போனது. காரணம் என்னவென்றால், அவர்கள் சிகரெட் பிடிப்பதால் , அவர்களைப் பார்த்து இளைஞர்களும் சிகரெட் பிடிப்பார்கள் என்ற வாதம். முதலில் அது சினிமா, அது ஒரு கற்பனை கதை, கற்பனை உலகம். அந்தக்கதையில் அந்த கதாபாத்திரம் சிகரெட் பிடிப்பதையோ, கொலை செய்வதையோ, நாம் […]
அதானிக்கு மேலும் தலைவலி
தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியிருக்கிறது. அமெரிக்க நீதித் துறை (department of justice) அவரை 250 மில்லியன் டாலர் (சுமார் 21,000 கோடி ரூபாய்) லஞ்ச ஏற்பாட்டின் மேற்பார்வை மற்றும் அதனை மறைத்து அமெரிக்காவில் நிதி திரட்டிய வழக்கில் குற்றம் சாட்டியுள்ளது. புதன்கிழமை நியூயார்க்கில் தாக்கல் செய்யப்பட்ட இக்குற்றச்சாட்டு, 62 வயதான கௌதம் அதானிக்கு மிகப் பெரிய சவால் என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இவரது வணிக சாம்ராஜ்யம் […]
கடவுள் நம்பிக்கை. தெய்வத்தால் ஆகாத காரியமும் கடுமையான முயற்சியால் கைகூடும் என்பது வள்ளுவன் வாக்கு. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் பகுத்தறிவு என்பது என்ன சொல்கிறது? சாமியும் இல்ல பூதமும் இல்ல. கடினமாக உழைத்தால் எதிலும் வெற்றி பெறலாம், மதியால் விதியை வெல்லலாம். இதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சந்தேகம் எழுகிறது. சில ஆயிரம் ரூபாய் கொடுத்து பாட்டுக்கச்சேரியை பார்க்க வருபவனுக்கு உட்கார கூட இடம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு திரும்பி செல்லும் சூழல் வரும்போது, […]