Categories
சினிமா தமிழ்

இந்தியன் 2 : ஒரு பார்வை

திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தின் கதையும் ஓட்டமும் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் எச்சரிக்கையாக அணுக்கலாம்.  சென்ற வாரம் நமது பக்கத்தில் இந்தியன் படத்தின் எதிர்பார்ப்புகளை பற்றி அருண் பாரதி அவர்கள் எழுதியிருந்தார். பலத்த எதிர்பார்புகளுடன் வந்த திரைப்படம் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற வில்லை. சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றுவதை பார்த்தல் படம் ரொம்ப மொக்கையாக இருக்கலாம் என்று உத்தேசித்து நானும் விட்டுவிட்டேன். தெரிந்தோ தெரியாமலோ இந்த படத்தின் பாடல்கள் என்னோடு ஒட்டிக்கொண்டன. […]

Categories
சினிமா தமிழ்

சினிமா வரலாறு: சத்யஜிட் ரே

திரைப்படம் என்பது பெரும்பாலான சாமானிய மக்களின் பொழுதுபோக்கு என்றாலும், அது வெறுமனே பொழுதுபோக்கு என்ற ரீதியில் மறந்து விடக்கூடியதல்ல. ஒவ்வொரு திரை ரசிகரின் மனதிலும் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தும் திரைப்படத்துறையில் சாதித்தவர்களின் நினைவுகளும் நம்மில் நிலைத்திருப்பது என்னவோ உண்மை. அப்படியான ஒரு திரை ஜாம்பவான் இயக்குனர் சத்யஜித்ரே. யதார்த்தமாக ஒருவர் ஏதாவது திரைப்படத்தைப்பற்றி விமர்சிக்கும் போது, மனசுல பெரிய சத்யஜித்ரே்னு நினைப்பு என்று சொல்லப்படுவது உண்டு. ஏனென்றால் அவர் இயக்குனரோடு அல்லாமல் திரை விமர்சகராகவும் இருந்தவர். மேலும் […]

Categories
சினிமா தமிழ்

சினிமா வரலாறு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்புச் சக்கரவர்த்தி திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பங்களிப்பில்லாமல் தமிழ் சினிமாக்களை நினைவு காண முடியுமோ? “வரி , வட்டி , திரை , கிஸ்தி” என்று கம்பீரமான வீரபாண்டிய கட்டபொம்மனாக நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் கணேசமூர்த்தி ஆகிய சிவாஜி கணேசனுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்து தான் நடிப்பில் ஈடுபாடு வந்தது. அந்த ஈடுபாடு, ஏழு வயதில் பெற்றோருக்குத் தெரியாமல் நாடக சபையில் போய் இணையும் அளவிற்கு லட்சியமாக உருவெடுத்தது. சிறுவயதிலேயே […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

கோடிகளில் புரளும் கோவண ஆண்டி

சினிமா மற்றும் ஆன்மிகம் தான் இன்று கோடிகளில் பணம் கொழிக்கும் தொழில்துறை அல்லாத இரு துறைகள் என்பது மறுக்க முடியாத உண்மை. சினிமா ஆவது பல கோடிகளில் செலவு செய்து பல மனிதர்களின் உழைப்பில் உருவாகி திரையில் ஓடி மக்கள் மனதைக்கவர்ந்தால் தான் வெற்றியும் பணமும். ஆன்மீகம் அப்படி இல்லை. பழனிக்குச் சென்றால் பயனுண்டு, திருப்பதி சென்றால் திருப்பமுண்டு, ஐயப்பனைக்கண்டால் ஆனந்தமுண்டு என்று நம்பி அங்கே சென்று அழுது புரண்டு தங்கள் பிரார்த்தனைகளைக் கொட்டும் எத்தனை பக்தர்களுக்கு […]

Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

கல்வி தந்தை காமராஜரின் நினைவுகள்

கல்வித்தந்தை காமராஜர், தன்னால் ஏழ்மை காரணமாகப்படிக்க முடியாமல் போனது மாதிரி தம் ஆட்சி காலத்தில் ஏழ்மை காரணமாக படிக்க இயலவில்லை என்று ஒரு குழந்தையும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணியவர்.

Categories
தமிழ் நினைவுகள்

மனதை கவர்ந்த மாருதி 800

பெரும்பாலான மக்களுக்கு சொந்தமில்லாததாக இருந்தாலும் அனைவரது நினைவுகளிலும் நிலைத்து நிற்கும் மாருதி 800 என்ற மகிழுந்தைப் பற்றி ஒரு முறை பின்னோக்கிப் பார்க்கலாம். 1983 முதல் 2014 வரை பல நடுத்தர குடும்ப மக்கள் எளிமையாக சொந்தம் கொண்டாடிய வாகனம் இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்த்து கிட்டதட்ட 30 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆன மாடர்ன் ரக கார். அதாவது பியட் பத்மினி, அம்பாசிடர் கார்களை ஒப்பிடும் போது மாருதி 800 தான் நவீன மகிழுந்து. […]

Categories
தமிழ் நினைவுகள்

பாம்பன் பாலத்தின் நினைவுகள்

இந்தியாவின் முதல் கடற்பாலம் என்ற பெருமையோடு அல்லாமல் 2010 மும்பையின் பாந்த்ரா பாலம் திறக்கப்படும் வரை, மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் தன்னுள்ளே தக்கவைத்திருந்த பாலம்.

Categories
கருத்து குட்டி கதை தமிழ்

குருபக்தி, குட்டி கதைகள்

குருபக்தியை நினைவுறுத்தும் விதமாக சிறுகதைகளை பெரியவர்கள் சொல்வதுண்டு. நினைவுகள் வாசகர்களோடு அப்படியான இரு கதைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.

Categories
தமிழ் வரலாறு

சுதந்திர தேவியின் சிலை

உலகில் மிகப்பிரம்மாண்டமாக பல சிலைகள் வந்துவிட்ட போதிலும், இந்தியாவின் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை விண்ணை முட்டும் உயரத்தை அடைந்தாலும் , இவையெல்லாம் சமீப காலத்தில் உருவானவை, அல்லது 20 ஆவது நூற்றாண்டில் உருவானவை. இவற்றுக்கெல்லாம் முன்மாதிரியான சிலை, அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை (statue of liberty). பிரம்மாண்டம், மிகப்பிரம்மாண்டம் எல்லாம் பழக்கத்தில் இல்லாத பொறியியல் முன்னேற்றம் வெகுவாக இல்லாத 1886 ஆம் ஆண்டிலேயே 305 அடி உயரத்துக்கு ஒரு வெண்கல சிலை […]

Categories
சினிமா தமிழ்

Come Back இந்தியன்

பார்க்கலாம் இந்த இந்தியன் நம் நினைவுகளில் குடியிருக்கும் அந்தப்பழைய இந்தியனுக்கு ஈடு கொடுப்பாரா என்று.

நினைவுகள் வாசகர்களோடு இந்தியனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற அந்த சிறிய மனசந்தோஷத்தை நீவிரும் பெற விரும்புகிறோம்.